Siragadikka Aasai: மீண்டும் மோதிக்கொள்ளும் அருண் - முத்து... கோபத்தில் சீதா எடுத்த முடிவு...

By :  AKHILAN
Published On 2025-05-29 09:07 IST   |   Updated On 2025-05-29 09:07:00 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

முத்து மற்றும் செல்வம் கார் ஷெட்டில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது செல்வம் நீ பேசாமலே இரு கொஞ்ச நாள் கழித்து அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிப்பாங்க. உனக்கும் செலவு மிச்சம் என்கிறார்.

இதில் கடுப்பான முத்து அவரை அடிக்க ஏன் டா நீ வேற இப்படி பேசுற. சீதா நல்ல பொண்ணு. கல்யாணம் செஞ்சு நல்லபடியா இருக்கணும். அந்த ஆளை கட்டிக்கிட்டா நல்லா இருக்க முடியாது என்கிறார்.

பின்னர் முட்டுச்சந்தில் முத்து கார் வர எதிர் திசையில் வருகிறார் அருண். அவர் இவரை பின்னால் போக சொல்ல முத்து என்னால் நகர முடியாது எனக் கூறிவிடுகிறார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் மல்லுக்கட்டிக்கொண்டு அங்கையே நிற்கின்றனர்.

சிறிது நேரத்தில் அந்த இடத்தில் டிராபிக் அதிகமாகி விடுகிறது. எல்லாரும் காரை நகர சொல்ல பைக் போனால் தான் கிளம்பி விடுகிறேன் என்கிறார். பின்னர் அங்கு வரும் சீதா காருக்கு பின்னால் இருந்து அருணிடம் கை எடுத்து தள்ளச் சொல்ல அவரும் பின்னால் நகர்ந்து விடுகிறார்.

முத்து காரை எடுத்து நகர்ந்து சென்று பெருமையாக தான் பிடிவாதமாக நின்றதால் அவர் பைக்கை எடுத்து சென்றார் என சீதாவிடம் கூறுகிறார். சீதா அமைதியாக இருக்க அவரை பார்த்துக்கொண்டு நிற்கிறார் அருண். முத்து சீதாவை வா எனக் கூறி காரில் அழைத்து செல்கிறார். 

 

வீட்டில் மீனா மற்றும் அவர் அம்மா பேசிக்கொண்டு இருக்கின்றனர். இந்த கல்யாணத்தில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. மாப்பிள்ளை அப்பா இடத்தில் இருக்காரு. சத்யா விஷயத்தில் மாப்பிள்ளை சரியா தானே நடந்துக்கிட்டாரு.

அவர் ஒப்புக்கொண்டால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. உடனே கல்யாணத்துக்கு சம்மதம் என்கிறார். மீனா என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியாக இருக்கிறார். வீட்டிற்குள் இருக்கும் சீதாவும் இதை கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

விஜயாவின் டான்ஸ் கிளாஸ் நடந்துக்கொண்டு இருக்கும் போது காதலுக்கும் மாணவர்கள் ரொம்ப நெருக்கமாக பேசு அவரை பார்வதி கோபமாக பார்க்கிறார். பின்னால் அவர்கள் கிளம்பியதும் பார்வதி மற்றும் விஜயா பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

விஜயா தனக்கு ரோகிணி வாங்கி கொடுத்த செயினை காட்டுகிறார். நான் இனிமே கோபத்தை குறைத்து கொள்ள போவதே இல்லை. அப்போதுதான் எனக்கு பணம், நகையா வாங்கிட்டு வருவாள் என்கிறார் விஜயா. சிந்தாமணி அப்போ வர அவர் தனக்கு பிறந்தநாள் என அழைக்கிறார்.

அடுத்த நாள் அவர் அருணை நேரில் சந்தித்து எனக்கு இந்த கல்யாணம் நடக்கணும் என்றால் எங்க மாமாவோட சம்மதம் வேண்டும். நாம தானே வாழப்போறோம் என அருண் கேட்க அது கல்யாணத்துக்கு அப்புறம் தானே என்கிறார்.

சீதா எனக்கு என்னுடைய குடும்பம் தான் முக்கியம். அவர்கள் சம்மதம் இருந்தால் மட்டுமே கல்யாணத்துக்கு சம்மதிப்பேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார்.

Tags:    

Similar News