முடிக்க வேண்டியதை முடிக்காம தேவையில்லாத 3 சீரியலில் கை வைத்த விஜய் டிவி…

By :  AKHILAN
Update: 2025-05-29 12:30 GMT

Vijay Tv: விஜய் தொலைக்காட்சி தொடரிகளில் தொடர்ச்சியாக மூன்று சீரியல் முடிக்க இருக்கும் நிலையில் அதுவும் இப்போ ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகத்தில் இருக்கும். அதிலும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

அதுமட்டுமல்லாமல் மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ்2, அய்யனார் துணை உள்ளிட்ட சீரியல்கள் சூப்பர்ஹிட் வரிசையில் இருக்கிறது. தொடர்ந்து, புரோமோக்கு மட்டுமே சில சீரியல்கள் இன்னமும் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த லிஸ்ட்டில் இருக்கும் சீரியல்களுக்கு ஒரு முடிவு கட்டப்பட்டு இருக்கிறது. நல்ல கேரக்டர்கள் இருந்தாலும் கதை சரியாக இல்லாத காரணத்தால் கடந்த ஒரு வருடமாக ஓடி வந்த பொன்னி சீரியலை முடிக்க இருக்கின்றனர். 

 

அதை தொடர்ந்து சக்திவேல் சீரியல் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாமல் இருந்த காரணத்தால் தற்போது இதையும் முடிக்கப்பட இருப்பதாக டிவி நிர்வாகம் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இதில் அதிர்ச்சி தகவலாக ஆஹா கல்யாணம் சீரியலை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அந்த சீரியல் ஏற்கனவே நல்ல வரவேற்பை கொண்டு லிஸ்ட்டில் இருந்தாலும் இந்த முடிவால் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் நல்ல லிஸ்ட்டில் இருக்கும் ஆஹா கல்யாணம் சீரியலை முடிக்க ஏற்பாடு செய்து இருக்கின்றனர். ஆனால் பல வருடமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலை தேவை இல்லாத கதைக்களத்தால் நகர்த்தி வருவது எந்த முறையில் சரியாக இருக்கும்.

இன்னமும் பாக்கியா அடுத்த ஹோட்டல் தொடக்க கதை, இனியாவின் கல்யாண டிராக் என அருவையாக அறுத்து கொண்டு இருப்பதை எப்போதான் நிறுத்துவீங்க எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் இன்னமும் பாக்கியலட்சுமிக்கு எண்ட் கார்ட் போடுவது குறித்த பேச்சே இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Tags:    

Similar News