ஃபிராடுத்தனம் பண்ணிட்டு கம்பி எண்ணும் கணவர்!.. கலர் கலரா புடவை கட்டி ரீல் சுத்தும் மகாலட்சுமி!..

மாதவா மீடியா என்னும் தயாரிப்பு நிறுவனத்திடம் சுமார் 16 கோடி ரூபாயை மோசடி செய்து ஏமாற்றிய வழக்கில் தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகருக்கு ஜாமீன் கூட மறுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தினமும் கலர் கலராக சேலை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் தத்துவ கேப்ஷன்களுடன் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சின்னத்திரை நடிகை மகாலட்சுமி லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை கடந்த ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த பாடிக்கு இந்த […]

By :  Saranya M
Update: 2023-10-01 07:00 GMT

மாதவா மீடியா என்னும் தயாரிப்பு நிறுவனத்திடம் சுமார் 16 கோடி ரூபாயை மோசடி செய்து ஏமாற்றிய வழக்கில் தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகருக்கு ஜாமீன் கூட மறுக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தினமும் கலர் கலராக சேலை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமில் தத்துவ கேப்ஷன்களுடன் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை கடந்த ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த பாடிக்கு இந்த லேடியா என ஆரம்பித்து காசுக்காக தான் மகாலட்சுமி கல்யாணம் பண்ணிக்கொண்டார் என்பது வரை ஏகப்பட்ட கடுமையான விமர்சனங்கள் மற்றும் கேலிப் பேச்சுக்கள் மகாலட்சுமியை தொடர்ந்து சூழ்ந்து வந்தது.

இதையும் படிங்க: மீண்டும் ஒன்னா ஒரே நேரத்தில் விஜயும் அஜித்தும்! தல விரும்புவதும் அதுதானாம்!..

மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் சந்திரசேகர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களையும் பதிவுகளையும் போட்டு ரசிகர்களின் உயிரை வாங்கி வந்தனர்.

திடீரென ரவீந்தர் சந்திரசேகர் பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சில நாட்கள் சோசியல் மீடியா பக்கம் வராமல் முடங்கிக் கிடந்த மகாலட்சுமி மீண்டும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து டிசைன் டிசைனாக சேலைகளை அணிந்து கொண்டு போட்டோக்களை வெளியிட்டு விளம்பரம் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: வா செல்லம் நீ வந்தாதான் களை கட்டும்!.. சிக்குன்னு காட்டி இழுக்கும் ஷிவானி நாராயணன்…

ஞாயிற்றுக்கிழமை இன்றும் கருப்பு நிற சேலையை அணிந்து கொண்டு மகாலட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. மேலும் அதற்கு வழக்கம்போல தத்துவ கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ”You don’t have to prove yourself to anyone” யாருக்காகவும் உங்களை நீங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்ன பதிவிட்டுள்ளார் மகாலட்சுமி.

அவரது போஸ்ட்க்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் மோசமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். போட்டோ வேண்டுமென்றால் போட்டுக் கொள்ளுங்கள், தயவுசெய்து இது போன்ற தத்துவங்களை சொல்லி தலைவலி உண்டு பண்ணாதீர்கள் என பங்கம் பண்ணி வருகின்றனர்.

Tags:    

Similar News