ரஜினி சொன்ன குட்டிக்கதையில் இவ்வளவு சிக்கல்களா? யாரு அந்தக் கழுதை?

ரஜினி இப்போ எல்லாம் குட்டிக்கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. வேட்டையன் ஆடியோ லாஞ்ச்ல என்ன கதை சொன்னாருன்னு பார்ப்போமா...

By :  sankaran
Update: 2024-09-21 16:35 GMT

இமயமலையில் 22 வயசு சன்னியாசி இருந்தாரு. அவரு துணியைத் துவைக்க கொஞ்ச தூரம் போகணும். அதுக்காக கழுதை ஒண்ணை வளர்க்குறாரு. அது ஒரு தடவை காணாம போயிடுது.

அவரு கண்ணை மூடிக்கிட்டு உட்கார்ந்துடுறாரு. ஒரு நாள் டிரஸ் இருக்கு. இன்னொரு நாள் டிரஸ் இல்ல... எல்லாரும் அவரை முனிவராக்கிடறாங்க. ஒரு நாள் கழுதை கனைக்கிற சத்தம் கேட்டு என் கழுதை என் கழுதைன்னு கண்ணை விழிச்சி கழுதையைத் தேடிப் போறாரு. உட்காருங்க. கழுதையைப் போய் ஏன் தேடி ஓடறீங்கன்னு கேட்குறாங்க.

'யோவ் நான் டோபி... கழுதை தான் என்னோட வாழ்க்கை. அதை தொலைச்சிட்டேன். இப்போ கத்துது. அதை வச்சித் தான் என்னோட துணியை வெளுக்க முடியும்'னு சொல்றாரு. யோவ் நீ டோபி இல்லய்யா. பெரிய முனிவர். உங்களைத் தேடி கோடீஸ்வரன் எல்லாம் உங்க காலடியில வந்து கிடக்குறான். நீ பாட்டுக்கு இனிமே அதையே மெய்ன்டைன் பண்ணுங்க. இதுதாங்க ரஜினியோட வாழ்க்கைன்னு சொல்றாரு. இதை சொல்றதுக்கு பெரிய துணிச்சல் வேணும்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய்லர் பட விழாவில் காக்கா கழுகு கதையை சொன்னார். அது பரபரப்பானது. வைரலானது. ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரீச்சானது. ஜெயிலர் படத்தில் வந்த காவாலா சாங் தமன்னாவை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய்ச் சேர்த்தது. 


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய்லர் பட விழாவில் காக்கா கழுகு கதையை சொன்னார். அது பரபரப்பானது. வைரலானது. ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரீச்சானது. ஜெயிலர் படத்தில் வந்த காவாலா சாங் தமன்னாவை பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய்ச் சேர்த்தது. 

பொதுவாக அவர் யாரைக் கழுதைன்னு சொன்னது? யார் டோபி? இது ஒரு பக்கம் போய்க்கிட்டே இருக்கு. ரஜினி, விஜய் ரசிகர்கள் சண்டையிடுவது சமூக வலைதளத்தில் சிறு பாத்திரம். மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாற பாலு தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News