அய்யய்யோ ஆண்ட்ரியா இனிமே நடிக்க மாட்டாரா?.. பிசாசு 2 என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு இப்படி சொல்லிட்டாரே!

முகூர்த்த நாள் என்பதால் நேற்று திடீரென பல நகை கடைகள் சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. வாணி போஜன் ஒரு நகை கடையை திறந்து வைத்தார். அவரிடம் விஜய்யின் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதே போல நடிகை ஆண்ட்ரியாவும் நகை கடை ஒன்றை திறந்து வைத்துள்ளார். அவரிடமும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதைப் பத்தி வேணா கேளுங்க, அதை பத்தி எல்லாம் என்னால எதுவும் சொல்ல முடியாது என எந்த சர்ச்சையிலும் சிக்க வேண்டாம் என எஸ்கேப் ஆகி விட்டார் ஆண்ட்ரியா.

இதையும் படிங்க: விஜய்யோட ஒவ்வொரு மூவும் அந்த கட்சிக்குத்தான் ஆப்பு?.. சீமான் என்ன சொன்னார் தெரியுமா?

அப்படி சீக்கிரமா விட்ருவோமா என நினைத்த செய்தியாளர்கள் புதிய படங்களில் அதிகமாக பார்க்க முடிவதில்லையே சினிமாவை விட்டு விலகிட்டீங்களா என்றே கேட்டு விட்டனர்.

அதற்கு பதில் அளித்த ஆண்ட்ரியா விலகிட்டேனா என சிரித்தார். பின்னர், விலகினால் உங்களுக்கு என்ன? அது என் இஷ்டம் என தக் லைஃப் ஆக பதிலத்தார்.

இதையும் படிங்க: லால் சலாம் சோலி முடிஞ்சு!.. சன்டே கலெக்‌ஷனும் செல்ஃப் எடுக்கல!.. வேட்டையன் படத்துக்கும் வேட்டு?..

மேலும், பிசாசு 2 படம் என்ன ஆனது? எப்போ ரிலீஸ் ஆகும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு அதை நீங்க மிஷ்கின் சார் கிட்ட தான் கேட்கணும். எனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என பதில் அளித்து விட்டார்.

அரண்மனை 4 படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அந்த படம் என்ன ஆனது எப்போது ரிலீஸ் ஆகும் என எந்தவொரு அறிவிப்பையும் சுந்தர். சி அதன் பின்னர் அறிவிக்கவே இல்லை. கடைசியாக ஓடிடியில் வெளியான அனல் மேல் பனித்துளி படத்தில் ஆண்ட்ரியா பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார்.

 

Related Articles

Next Story