More
Categories: Cinema News latest news

“மானத்தை பத்தி பேச தகுதி இருக்கா?”… சீண்டிப்பார்த்த ரசிகர்…வெளுத்து வாங்கிய ஆண்ட்ரியா…

பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து வரும் ஆண்ட்ரியா, “பச்சைக்கிளி முத்துச்சரம்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகனாமார். அதன் பின் “ஆயிரத்தில் ஒருவன்”, “தரமணி”, “வட சென்னை” ஆகிய திரைப்படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

Andrea Jeremiah

ஆண்ட்ரியா தற்போது “பிசாசு 2”, “அனல் மேலே பனித்துளி”, “மாளிகை” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் “அனல் மேலே பனித்துளி” திரைப்படம் வருகிற 18 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இத்திரைப்படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். கைசர் ஆனந்த் என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Advertising
Advertising

Anel Meley Pani Thuli

ஆண்ட்ரியா முன்னணி கதாநாயகியாக நடித்துள்ள இத்திரைப்படத்தின் கதை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் “மானம் என்பது என்னுடைய உடலிலோ நான் அணியும் ஆடையிலோ இல்லை, நான் வாழும் வாழ்க்கையில்தான் இருக்கிறது” என ஆண்ட்ரியா பேசுவது போன்ற ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து அந்த டிரைலரின் கம்மென்ட் பகுதியில் ரசிகர் ஒருவர் “ஆண்ட்ரியா நிறைய ஆண் நண்பர்களுடன் சுற்றுகிறார். மானத்தை பற்றியெல்லாம் அவர் பேசலாமா?” என பதிவிட்டிருந்தார். மேலும் இதனை ஆதரிப்பது போன்றும் பல கம்மென்ட்டுகள் இடம்பெற்றிருந்தன.

இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு 100 ஆவது படம்… ஆனால் பார்ட்டி வைத்து கொண்டாடியதோ முத்துராமன்… என்ன காரணம் தெரியுமா?

Anel Meley Pani Thuli

இந்த நிலையில் இது  குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆண்ட்ரியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா “பாய் ஃப்ரெண்டு வச்சிருந்தா மானம் இல்லைன்னு அர்த்தமா? எப்படி இப்படி ஒரு கேள்வியை ஒருவர் கேட்கலாம். இதை எல்லாம் பார்க்கும்போது எனக்கு கோபம் வரவில்லை. சிரிப்புத்தான் வருகிறது” என கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர் “இது போன்ற ஆட்களுக்குத்தான் நாங்கள் இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தை அவர்கள்தான் பார்க்க வேண்டும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad

Recent Posts