கோச்சிக்கிட்டு போன பூமிகா… தேடி அலைந்த படக்குழு… கடைசியில் ஹீரோவை வைச்சு சமாளித்த சுவாரஸ்யம்!...

Boomika: நடிகை பூமிகாவின் பப்லியால் கோலிவுட்டில் எண்ட்ரியான சில படங்களிலேயே உச்சம் அடைந்தார். ஆனால் அவரின் கேரியர் திடீரென சரிவை சந்தது. அதற்கு காரணமாக அவரின் கோபம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று சமீபத்திய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கில் முதலில் நாயகியாக அறிமுகமானவர் பூமிகா. அப்படம் நல்ல ரீச்சை கொடுத்தது. தொடர்ந்து, தமிழில் விஜயின் நாயகியாக பத்ரி படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் அவர் என் ரோலுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும் தொடர்ச்சியாக தமிழிலும் வாய்ப்புகள் வந்தது.

இதையும் படிங்க: கொடுத்து வச்ச சூர்யா!.. கவர்ச்சி கடலாக கலக்கும் கங்குவா ஹீரோயின்!.. ஜோதிகா தான் ரொம்ப பாவம்!..

ஆனால் பூமிகா தமிழை விட தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அம்மொழிகளில் தான் நிறைய படங்களிலும் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் ஹீரோயினாக நடித்தது ஜில்லுனு ஒரு காதல் படம். இப்படத்தில் ஐசுவாக வந்து ரசிகர்களிடம் பெரிய ரெஸ்பான்ஸை பெற்று இருப்பார். இருந்தும் அவருக்கு அதன் பின் தமிழில் ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழ் சினிமா கேரியரில் பூமிகாவின் சொல்லக்கூடிய படம் என்றால் ரோஜா கூட்டம் தான். சசி இயக்கிய இப்படத்தில் ஸ்ரீகாந்த் உடன் ஜோடி போட்டு நடித்திருப்பார். இப்படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் படப்பிடிப்பில் பூமிகா படக்குழுவை ஒரு பாடலுக்கான ஷூட்டிங்கில் அழுக விட்டாராம்.

ஹிட் பாடலான ஆப்பிள் பெண்ணே முதலில் சிக்மங்களூர் மற்றும் ஹம்பி பகுதியில் ஷூட் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் எகிப்தில் ஷூட்டிங்கை வைக்கலாம் என கோரிக்கை வைத்தார். ஆனால் பூமிகாவின் பாஸ்போர்ட் பிரச்சினையால் அங்கு படப்பிடிப்பை நடத்த முடியாமல் போனது.

இதையும் படிங்க: கோட் ஷூட்டிங் லொகேஷன் மாறியதால் பிரபுதேவாவுக்கு அடித்த ஜாக்பாட்!.. அனுஷ்காவுடன் டூயட் பாடப்போறாரா?

இதையும் படிங்க: தலையில காரக் குழம்பு கொட்டிடுச்சா!.. ஷிவானி நாராயணனின் புது லுக்கை பார்த்து.. பகீரான ஃபேன்ஸ்!..

 

Related Articles

Next Story