Connect with us
goundamani

Cinema News

கவுண்டமணி – செந்திலை விட ராஜ ரகளை செய்த அந்த கூட்டணி! இவர்கள அடிச்சுக்க யாருமில்ல

Goundamani Senthil: நகைச்சுவையில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியவர்கள் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில். அதுவரை நாகேஷ், சந்திரபாபு என தனி ஆளாக நின்று மக்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு இரட்டையர்கள் போல இருவருமே சேர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடிக்க தொடங்கினர். இதில் செந்திலைத்தான் மிகவும் பாராட்ட வேண்டும்.

இருவருமே புகழ்பெற்ற நடிகர்களாக இருந்த போதும் நடிக்கிற வரைக்கும் கவுண்டமணியிடம் அடிவாங்கும் ஒரு கேரக்டரில்தான் செந்தில் நடித்தார். இதை எந்த நடிகராவது செய்வார்களா?அடி வாங்கியே தன்னை பிரபலமாக்கிக் கொண்டவர்தான் செந்தில். அதுவும் ஸ்கிரிப்ட்டில் உள்ளதை இருவரும் பேசமாட்டார்கள், ஸ்பாட்டில் என்ன தோன்றுகிறதோ அதையே பேசித்தான் நடிப்பார்கள்.

இதையும் படிங்க: என்னது ‘பஞ்சதந்திரம் 2’வில் கமல் கேரக்டரில் இந்த நடிகரா? ஆர். ஜே.பாலாஜி சொன்ன சூப்பரான தகவல்

அதுதான் இதுவரை வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. இந்த நிலையில் கவுண்டமணி செந்தில் இவர்களின் நகைச்சுவையை தாண்டி கவுண்டமணி – சத்யராஜ் கூட்டணிதான் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இருவரும் செய்யும் லூட்டிகள் சொல்லிமாலாது. சைலண்டாக இருந்து குசும்பு செய்கிறவர் கவுண்டமணி என சத்யராஜ் ஒரு மேடையில் கூறியிருக்கிறார்.

மக்களிடம் குபீர் சிரிப்பை வரவழைத்ததும் இந்த கூட்டணிதான். 1990 ஆம் ஆண்டு வேலை கிடைச்சிடுச்சு, நடிகன், வாழ்க்கைச் சக்கரம் போன்ற படங்களில் இருவரும் சேர்ந்து நடிக்கத் தொடங்கி அதனை தொடர்ந்து புதுமனிதன், பிரம்மா என ஜெட் வேகத்தில் அடுத்தடுத்து பல படங்களில் தாங்கள் யார் என்பதை காட்ட ஆரம்பித்தார்கள். ஒருவருக்கொருவர் சளைச்சவர்கள் இல்லை என்பதை தங்கள் காமெடி மூலம் காட்டினார்கள்.

குறிப்பாக நடிகன் படத்தில் ‘நீ உங்க அம்மாவ காப்பாத்தறதுக்காக ஆள் மாறாட்டம் பண்ணேங்கறதால உன்ன என்ன வெள்ளிக் கம்பி ஜெயில்லயா போடுவாங்க…திருடன்னா உங்களுக்கு அவ்வளவு எளக்காரமா?’ என்ற காமெடி அல்டிமேட்.

இதையும் படிங்க: தாளக்கருவியே இல்லாமல் இளையாராஜா இசை அமைத்த சூப்பர்ஹிட் பாடல்… எந்தப் படம்னு தெரியுமா?

தெற்கு தெரு மச்சான், ரிக் ஷா மாமா, திருமதி பழனிச்சாமி என இவர்கள் கிட்டத்தட்ட ஆறு, ஏழு ஆண்டுகள் தொடர்ந்து படங்களில் சேர்ந்து நடிக்க தொடங்கினர். யாரிடமும் இல்லாத கெமிஸ்ட்ரி கவுண்டமணி மற்றும் சத்யராஜிடம் இருந்தது. கேமிரா இல்லாமல் மிகவும் இயல்பாக பேசுவது போல், ஏதோ இருவரும் பல ஆண்டுகள் நெருக்கமான நண்பர்கள் போல எப்பொழுதுமே பேசிக் கொள்வார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top