கமல் படத்தில் வசமாக மாட்டிக்கொண்ட முழிக்கும் எஸ்.கே.. செம கடுப்பில் முருகதாஸ்!.. நடப்பது இதுதான்!..

தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியவர் சிவகார்த்திகேயன். ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தை பிடித்தார். இவரின் பல படங்கள் நல்ல வசூலை பெற்றது. பிரின்ஸ் படம் சரியாக போகவில்லை என்றாலும் அதன்பின் வெளியான மாவீரன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், பொங்கல் ரிலீஸாக வந்த அயலான் படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு ராணுவ வீரர் பற்றிய கதையாகும். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடித்துகொண்டிருக்கும்போதே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முருகதாஸும், சிவகார்த்திகேயனும் சந்தித்துகொண்ட புகைப்படங்களும் வெளியானது.

இதையும் படிங்க: பொங்கல் ரிலீஸ்!.. 500 கோடி வசூலை அள்ளிய டோலிவுட்.. 200 கோடிக்கே முக்கும் கோலிவுட்.. ஆரம்பமே இப்படி?

ஆனால், படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. கமல் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், காஷ்மீரில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் சில மாதங்கள் படப்பிடிப்பு தடைப்பட்டது.

sk

கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் படப்பிடிப்பு துவங்கியது. இதனால், முருகதாஸ் செம கடுப்பில் இருக்காராம். ஏனெனில், அவரின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை. எனக்கு உடனே கால்ஷீட் கொடுங்கள் என சிவகார்த்திகேயனை நச்சரிக்க துவங்கிவிட்டாராம். அதோடு, இனிமேலும் காத்திருக்க முடியாது என கறாராக சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கமல்-ஹெச்.வினோத் படத்தின் கதை முக்கிய பிரபலத்தின் பயோபிக்காம்!.. ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்…

கமல் தயாரிப்பில் உருவாகி வரும் படத்திற்கு வேற கெட்டப்பில் இருப்பதால் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். முருகதாஸ் படத்திற்காக மலையாளத்தில் Thallumaala படத்தின் கேமராமேன் ஜிம்ஸி காலித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரும் பல மாதங்களாக காத்திருக்கிறார்.

இனியும் தாமதமானால் அவர் வேறு படத்திற்கு சென்று விடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, எப்படியாவது படப்பிடிப்பை உடனே துவங்கும் முயற்சில் முருகதாஸ் ஈடுபட்டுள்ளார்.

 

Related Articles

Next Story