Connect with us

Cinema News

மறைந்தவர்களின் குரலை மீட்டெடுத்த ஏ.ஆர். ரஹ்மான்!.. அந்த குடும்பத்துக்கு என்ன பண்ணாரு தெரியுமா?

ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படத்தில் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீதின் குரல்களை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் மீண்டும் உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர். ரகுமான்.

2.0 படத்தில் இடம்பெற்ற புல்லினங்கால் பாடலைப் பாடியவர் பம்பா பாக்கியா. காதலன் படத்தில் இடம்பெற்ற ஊர்வசி ஊர்வசி பாடலை பாடியவர் சாகுல் அமீத். ஜென்டில்மேன், திருடா திருடா, மே மாதம், கருத்தம்மா, ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் ஏ ஆர் ரகுமான் இசையில் சாகுல் ஹமீத் பாடியுள்ளார்.

இதையும் படிங்க: அஜித் மட்டும்தான் போட்டோ போடுவாரா!.. நாங்களும் போடுவோம்!.. வைரலாகும் சூர்யா புகைப்படம்…

அவர்கள் இருவரது குரலும் ஏ ஆர் ரகுமானுக்கு மிகவும் ஃபேவரிட் ஆன குரல் என்பதால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், அனந்திகா, தான்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிலாப் திரைப்படத்தில் இவர்களது குரலை ஏ ஆர் ரகுமான் பயன்படுத்தி இருக்கிறார்.

ஏஐ மூலமாக சமீபத்தில் எம்ஜிஆர் உள்ளிட்ட பலரை மீன் உருவாக்கம் செய்து வருகின்றனர். பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீத் குரலை பயன்படுத்துவதற்கு முன்பாக அவர்களது குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அதற்கான சம்பளத்தையும் கொடுத்து பின்னர் தான் பயன்படுத்தியுள்ளேன் என தற்போது ஏ ஆர் ரகுமான் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறன் உடம்புக்குள்ள புகுந்த விஜய் அப்பாவோட ஆவி!.. அடேய் எல்லை மீறி போறிங்கடா!..

இதே போல அனைவரும் அடுத்தவரின் உழைப்பை திருடாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

google news
Continue Reading

More in Cinema News

To Top