Categories: latest news

பொண்ணை ஏன் படிக்க வைக்கிற? ஓவராக பேசிய மக்களை கூப்பிட்டு மகளின் ஷோவை திருவிழாவாக மாற்றிய நிஷா தந்தை…

KPY Nisha: விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஆண்கள் தான் கலந்து கொண்டு வெல்லலாம் என்ற பிம்பத்தினை உடைத்தவர் அறந்தாங்கி நிஷா. அவரின் காமெடிக்கு இன்று பலர் ரசிகர்கள் என்றால் சென்னை வெள்ளத்தில் அவர் செய்த தொண்டுக்கு இன்று பலரும் அவருக்கு ரசிகர்களாகி விட்டனர்.

இப்படி புகழில் இருக்கும் நிஷா அவ்வளவு எளிதாக இந்த இடத்தினை பிடித்து விடவில்லை. ஒவ்வொரு இடத்தினை பிடிக்க அவர் பட்ட போராட்டம் ரொம்பவே அதிகம். சமீபத்தில் நிஷா தன் தந்தையை காட்டி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் தன் அப்பாவை காட்டிய நிஷா இவர் தான் என் ரோல் மாடல். இவரால் தான் நான் இருக்கேன் எனக் கூறி இருப்பார்.

இதையும் படிங்க: துப்பாக்கி கதை விஜய்க்கு பண்ணது இல்ல!.. அந்த ஹீரோ நடிக்கல!.. பகீர் கிளப்பும் முருகதாஸ்…

நிஷாவுக்கும் அவர் அப்பாவுக்குமான உறவு எப்படி இருந்தது தெரியுமா? அறந்தாங்கியை சேர்ந்தவர் நிஷா. வீட்டில் அப்பா, அம்மா, தம்பியுடன் வசித்து வந்தார். அப்பா வாரத்தில் இரண்டு நாள் கறிக்கடை போடுவாராம். நிஷாவை காலேஜ் வரை அனுப்பி படிக்க வைத்தாராம் அவர் அப்பா.

இருந்தும் ஒரு சமயத்தில் உறவினர்கள் அவர் வீட்டுக்கு வந்து பெண் பிள்ளையை இதுவரை படிக்க வைத்ததே அதிகம். நிறுத்திவிடு எனக் கூறிவிடுகின்றனர். ஆனால் நிஷாவின் அப்பா அவர்கள் பேச்சை கேட்கவில்லையாம். தொடர்ந்து படி என அவருக்கு உத்வேகம் தருகிறார்.

அதே சமயத்தில் நிஷா பட்டிமன்றத்தில் சென்று பேச போக அதுக்கும் தடுக்க மீண்டும் வருகின்றனர் உறவினர்கள். ஆனால் இப்போதும் அவர் கண்டுக்காமல் கடந்து சென்றுவிடுகிறார். நிஷா இதுகுறித்து அவர் தந்தையிடம் கேட்க நான் படிக்கவில்லை. ஆனால் பாரதியை பற்றி கேட்டு இருக்கேன்.

இதையும் படிங்க: கோட் பட இசையமைப்பாளருக்கு கொக்கிப் போட்ட காடுவெட்டி ஹீரோ!.. இதுல யாரு சொல்றதுப்பா நிஜம்?..

பெண்கள் சுதந்திரமாக வளர வேண்டும். இருந்தும் ஒரு கண்டிஷன், இப்போ திருமணம் செஞ்சிக்கிட்ட நீ ஒரு பிள்ளையை பெற்று கொண்டு இனி பட்டிமன்றம் மற்ற விஷயங்களுக்கு வெளியில் போ எனவும் கூறுகிறார். அதுப்போல திருமணம் முடிந்து ஒரு மகன் பிறந்த பின்னரே நிஷா முதல்முறையாக கலக்க போவது யாரு ஆடிஷனுக்கு வருகிறார்.

அதில் செலக்ட் ஆகிவிடுகிறாராம். இதை தன் தந்தையிடம் கூற அவர் அருகில் இருந்த மண்டபத்தினை வாடகைக்கு எடுத்து அதில் ஊர்மக்களை அழைத்து பெரிய டிவியை வைத்து கலக்க போவது யாரு நிகழ்ச்சியை போட்டு காட்டினாராம். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு டிபன் போட்டு அதை திருவிழாவாக்கி கொண்டாடி விட்டாராம். தன் மகளை பற்றி பேசிய அனைவருக்கும் பேசாமல் தன் செயலில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: உலக அழகியுடன் முதல் திருமணம்… கோடிகளில் சொத்து… நிக்கோலயின் இரண்டாம் மனைவியாகும் வரலட்சுமி…

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago