சினிமாவில் பல ஆண்டுகள் முன்பே அனைவருக்கும் சமமான உணவு முறையை கேப்டன் விஜயகாந்த் கொண்டு வந்த நிலையில், அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத நடிகர் அருண் விஜய் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் உருக்கமாக பேசியுள்ளார்.
புத்தாண்டு கொண்ட்டத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு ஏகப்பட்ட நடிகர்கள் படையெடுத்துக் கிளம்பி விட்டனர். அவர்கள் எல்லாம் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து சென்னை திரும்பி வரும் நிலையில், கேப்டன் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட தேமுதிக அலுவலகத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாய்ப்பும் இல்ல.. வேலையும் இல்ல!. எல்லாம் போச்சி!.. வறுமையில் வாடும் பிஜிலி ரமேஷ்…
நடிகர்கள் வரிசையாக வருவார்கள் என அங்கேயே கேமராவும் மைக்கும் வைத்து மீடியா ஆட்கள் முதல் யூடியூப் சேனல்கள் வரை உட்கார்ந்து இருக்கும் நிலையில், காலையில் கார்த்தி மற்றும் சிவகுமார் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு நடிகர் சங்கம் சார்பாக வரும் 19ம் தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவித்துச் சென்றனர்.
இந்நிலையில், தற்போது கையில் அடிபட்டுள்ள நிலையிலும் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அருண் விஜய் இனிமேல் விஜயகாந்த் வழியில் தானும் செயல்படப் போவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போதும்ட சாமி! உங்க சகவாசமே வேணாம் – திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மக்கள் செல்வன்
தன்னுடைய பட ஷூட்டிங்கில் இனிமேல் அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். அருண் விஜய்யின் இந்த பேச்சைக் கேட்ட ரசிகர்கள், அப்போ இத்தனை ஆண்டுகள் பெரிய நடிகர்களுக்கு ஒரு மாதிரியான சாப்பாடு, சிறிய நடிகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வேறு விதமான சாப்பாடு தான் வழங்கப்பட்டதா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…