Connect with us

Cinema News

எனக்கும், விஜய்க்கும் நிறைய பிரச்னை இருந்தது… ஆனாலும்?… ஓபனாக பேசிய பிரபல நடிகர்…

Vijay: விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்ததில் இருந்து பெரும்பாலான பிரபலங்களின் பேட்டிகளில் அவரின் அரசியல் கட்சி குறித்தும், அவருக்கான ஆதரவு குறித்தும் கேள்விகள் அதிகம் இடம் பெறுகிறது. அப்படி, அரசியல்வாதியும்,  நடிகருமான அருண்பாண்டியனிடம்  விஜயின் அரசியல் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்கள் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிகராக நிறைய படங்களில் நடித்திருந்தவர் அருண்பாண்டியன். இருந்தும், அவரின் நடிப்பில் ஊமை விழிகள், இணைந்த கைகள்,  தேவன் உள்ளிட்ட படங்களில் மட்டுமே நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகராக மட்டுமில்லாமல் தேமுதிகவில் இணைந்து முதல் தேர்தலிலே எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர்.

இதையும் படிங்க: சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்!.. எம்.ஜி.ஆர் சொன்ன காரணத்தை பாருங்க!…

பின்னர் தேமுதிகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர், அரசியலில் இருந்தும் பிரேக் எடுத்து கொண்டார். இவரின் மகள் கீர்த்தி பாண்டியனை நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.  தற்போது அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. பேட்டியில் இருந்து: எனக்கு அசோக்கை 15 வருடமாக தெரியும்.  சூது கவ்வும் படத்தை பார்த்துவிட்டு முதலில் விநியோக ரைட்ஸ் வாங்கிய முதல் ஆள் நான்தான்.

கீர்த்தியும்ம், அசோக்கும் காதல் குறித்து என்னிடம் பேசினர். எனக்கு அசோக்கை நன்கு தெரியும் என்பதால் ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு நல்ல மாப்பிள்ளை, நல்ல மகள் கிடைத்து இருக்கின்றனர். நான் சூழ்நிலையால் என் நண்பர் விஜயகாந்துக்காக அரசியலுக்கு போனேன். ஆனால் அது எனக்கு செட்டாகவே இல்லை. அதனால் அரசியலில் இருந்து விலகிவிட்டேன்.

இதையும் படிங்க: விஜய்கிட்ட முதல்ல சொன்னதே நான்தான்! பகிரங்கமாக கூட்டணி பற்றி கூறிய கமல்

அதுப்போல நடிகர் விஜய்ற்கும், எனக்கும் நிறைய சண்டை நடந்து இருக்கிறது. ஆனால் இந்த ஒரு விஷயத்துக்காக அந்த பையனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவே விரும்புகிறேன். பொதுவாக நடிகர்கள் ரிட்டயர்மெண்ட்டில் தான் அரசியலுக்கு வருவார்கள். ஆனால் விஜய் பீக்கில் இருக்கும் போது வந்தது பெரிய விஷயம் தான். 

நான் இதுவரை 120 படங்கள் நடித்திருக்கேன். ஆனால் அதில் ஒரு 30 படம் தான் பார்த்திருப்பேன். மிச்ச படங்கள் ஓடாது என எனக்கு தெரியும். அதனால் பார்க்க பிடிக்காது. அருண் பாண்டியன் ரொம்ப கோபக்காரர் என்ற பிம்பம் உண்டு. அதுக்கு காரணம் தேவையே இல்லாமல் பேசினால் எனக்கு பிடிக்காது. என் கேரக்டரை பேசினாலும் பிடிக்காது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: அடங்கப்பா எனக்கும் அந்த கதைக்கும் சம்மந்தமே இல்லை.. திடீரென வைரலாகும் செல்வராகவன் போஸ்ட்…

google news
Continue Reading

More in Cinema News

To Top