Connect with us

Cinema News

இப்போ என்ன இவரு காதல் பண்ணி பாக்கியா நோ சொல்ல போறாங்க அதானே! முடியல…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் ரூமுக்கு செல்கிறார். அப்போ அங்கிருக்கும் ஜெனியிடம் தூங்கலாமா என்று கேட்கிறார். அதுக்குள்ளையா கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கலாம். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது பேச்சு மாலினி பக்கம் செல்கிறது.

அவ போன் நம்பரை டெலிட் செஞ்சிட்டேன் என்கிறார் செழியன். அவ என்னைவிட அழகா இருப்பாளா எனக் கேட்க இல்லையே எனச் செழியன் சொல்ல அப்புறம் ஏன் அவ பக்கம் சாஞ்ச என்கிறார். இதை கேட்கும் செழியன் இனி அவ பெயரை கூட சொல்ல மாட்டேன் என்கிறார். பின்னர் தூங்க போகலாமா மாலினி எனக் கூறிவிடுகிறார். இதை கேட்கும் ஜெனி உன்னை திருத்தவே முடியாது என்கிறார்.

இதையும் படிங்க: தளபதி 69 படத்தின் இயக்குநர் இவரா?.. கோட் பட தயாரிப்பாளர் யாரை சொல்லியிருக்காரு பாருங்க!..

பின்னர் சாரி கேட்டு ஜெனியை தூங்க வைத்துவிட்டு கீழே செல்கிறார் செழியன். எழிலிடம் தன்னுடைய பிரச்னையை சொல்லி கவலைப்படுகிறார். அவங்களுக்கு கொஞ்சம் பயம் இருக்கு. அது சரியானதும், பழைய மாதிரி மாறிடுவாங்க என்கிறார் எழில்.

அடுத்ததாக பழனிசாமி வீட்டில் அவர் தன் அம்மாவிடம் பாக்கியாவுக்கு கேட்டரிங் காசை கொடுத்தீங்களா எனக் கேட்க, நான் கொடுத்தேன். அவன் உன் பிறந்தநாள் கிப்ட் எனச் சொல்லி சென்றுவிட்டதாக சொல்லிவிடுகிறார். சரி நான் கொடுத்து விட்டு வரேன் என பழனிசாமி கிளம்ப கூடவே விமலும் கிளம்பி செல்கிறார். இருவரும் ரெஸ்டாரெண்ட் வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்யின் கோட் படம் பற்றிய கேள்வி.. கடுப்பான மோகன்.. ஹரா டீசர் விழாவில் வாக்குவாதம்!..

விமல் பாக்கியா செல்லை காரணம் சொல்லி வாங்கிக்கொண்டு இனியா நம்பரை எடுக்கிறார். பின்னர் தனக்கு பிரண்ட்டை பார்க்க நேரம் ஆவதாக சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இதையடுத்து, பழனிசாமி காசை பாக்கியாவிடம் கொடுக்கிறார். ஆனால் பாக்கியா அன்புக்கு விலை பேசாதீங்க எனக் கூறி அந்த காசை வாங்க மறுக்கிறார். இதனால் பழனிசாமி சிரித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது. 

google news
Continue Reading

More in Cinema News

To Top