பாக்கியா வீட்ல விசேஷங்க… இப்டியா காப்பி அடிப்பீங்க… ஈஸ்வரி என்ன சொல்லுவாங்களோ!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் குழந்தை பற்றி பேசாதீங்க என ஈஸ்வரியிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். நீ பெத்துக்கிற வரை நான் அதை பத்தி பேசிக்கிட்டே தான் இருப்பேன் என்கிறார் ஈஸ்வரி. அந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது நானும், அமிர்தாவும் தான்.

அதான் நீ ஒரு படம் இயக்கிட்டேல. சின்ன வயசுலே பிள்ளை பெத்துக்கணும். வயசாகிட்டா பெத்துக்க முடியாது என்கிறார். எனக்கு இந்த வீட்ல கூடிய சீக்கிரம் வாந்தி எடுக்கிற சத்தம் கேட்கணும் என ஈஸ்வரி கோபப்படுகிறார்.

இதையும் படிங்க: விஜய்க்கு அவர் நோ சொல்லி இருக்கவே மாட்டார்… அதான் இதை செய்தோம்.. சீக்ரெட் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!…

அப்போ சரியாக ராதிகா வாந்தி எடுக்கிறார். கோபி என்ன ஆனது எனக் கேட்க தெரியலை என்கிறார் ராதிகா. ரெஸ்டாரெண்ட்டில் சாப்பிட்டது செட்டாகலை எனக் கூறுகிறார் கோபி. அடுத்ததாக, செழியன் மற்றும் எழில் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

பாக்கியா தூங்க போக சொல்ல செழியன் ரூமுக்கு போகவே பயப்படுகிறார். நீ தப்பு செஞ்சிருக்க. அவளை ஏமாத்த மாட்டேனு நம்புனா அவ சீக்கிரம் சரியாகிடுவா. நீ தான் நம்பிக்கை செய்யணும் என்கிறார் பாக்கியா. இதையடுத்து, இரவு முழுவதும் வாந்தி எடுத்துக்கொண்டே இருக்கிறார். ஹாஸ்பிட்டல் போலாமா என கோபி கேட்க மெடிக்கல் ஷாப் போகலாம் என்கிறார் ராதிகா.

இதையும் படிங்க: 22 முறை கமலுடன் மோதிய விஜயகாந்த் படங்கள்… ஜெயித்தது கேப்டனா? உலகநாயகனா?..

ஆனால் எல்லா மெடிக்கல் ஷாப்பும் மூடியே இருக்கிறது. திறந்து இருக்கதுக்கு போங்க எனக் கடுப்படிக்கிறார் ராதிகா. இதையடுத்து நாளைய புரோமோவில் ராதிகா கர்ப்பம் என தெரியவருகிறது. இதனை தொடர்ந்து இன்றைய எபிசோட் முடிந்தது.

 

Related Articles

Next Story