Connect with us

Cinema News

ஒருவழியா குடும்ப பிரச்னை எல்லாம் தீர்ந்துச்சு… அடுத்து என்ன இருக்கு… புதுசா கிளப்புவீங்களே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தா மற்றும் செல்வி என்ன நடந்தது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். யாருக்கு கால் செய்தும் எடுக்கவில்லை என்பதால் பதற்றத்தில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் பாக்கியா மற்றும் எழில் ரெஸ்டாரெண்டுக்கு வருகிறார்கள்.

வீட்டில் நடந்த விஷயத்தினை கூற ஜெனி வந்துவிட்டதாக சொல்லி சந்தோஷப்படுகின்றனர். செல்வி மருமகள்களோட பிரச்னையை தீர்த்து வைக்க பாக்கியா மாதிரி ஒரு மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என்கிறார். வீட்டில் ராமமூர்த்தி மற்றும் பாக்கியா ஜெனி வீட்டுக்கு வந்த விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். மரியத்துடம் சேர்ந்து போட்ட பிளானை சொல்கிறார் பாக்கியா.

இதையும் படிங்க: பிரச்சனை வந்ததும் தனுஷ் என்னை கைவிட்டுட்டாரு!.. நான் கல்லடி வாங்கினேன்!. புலம்பும் செல்வராகவன்…

அப்போ அங்கு வரும் ஈஸ்வரி எனக்கு என்ன செஞ்சா என்ன நடக்கும்னு தெரியும். நான் போட்ட இரண்டாம் கல்யாணம் தான் எல்லாத்தையும் சரி செஞ்சிட்டு என ஷாக் கொடுக்கிறார். இதை அங்கு நிற்கும் ராதிகா கேட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் பாக்யாவிடம் சென்று அத்த பேசியது உங்களுக்கு கோவமா இல்லையா என கேட்கிறார். சில நேரத்துல இருக்கும் ஆனா அது நம்ம அத்தை தானே சமாளிச்சு போயிடுவேன் என்கிறார்.

நம்ம அத்தையா என ராதிகா ஷாக்காக சமையல் வேலை இருப்பதாக பாக்கியா சென்று விடுகிறார்.  சமையல் முடித்து என்ன யாருமே சாப்பிட காணோம் என மாடியில் சென்ற பார்த்தால் எழில், அமிர்தா, செழியன், ஜெனி, இனியா ஆகியோர் உட்கார்ந்து பேசிக்கொண்டு சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்ட பாக்யா கீழே இறங்குவிட அவர் பின்னாடியே செழியனும் வருகிறார். 

இதையும் படிங்க:கவுண்டமணி அப்பேற்பட்ட ஆளுதான்! விசித்ரா சொன்னதையும் தாண்டி அதெல்லாம் நடந்திருக்கு.. போட்டுடைத்த பிரபலம்

பாக்கியாவை கட்டிப்பிடித்து எல்லாம் உங்களால தான் அம்மா. இனிமே நான் எல்லாத்திலையுமே சரியா இருப்பேன்  எனச் சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top