Connect with us

Cinema News

உங்க வாய் சும்மா இருக்க மாட்டிங்குது கோபி… கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் பாக்கியா, எழில், அமிர்தா, செல்வி ஆகியோர் கிச்சனில் அமர்ந்து ரெஸ்டாரண்டில் வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வருமானம் இல்லாமல் ஹோட்டல் நஷ்டத்தில் செல்வதை யோசித்து மாற்றி மாற்றி புலம்பி கொண்டிருக்கின்றனர். அதை அங்கு வரும் கோபி கேட்டு விடுகிறார்.

பின்னர் கிச்சனுக்கு தண்ணீர் எடுப்பது போல சென்று தன்னுடைய பிசினஸ் முதல் நாளிலிருந்து லாபத்தில் செல்வதாக சொல்லி பெருமை பட்டுக்கொள்கிறார். சமையல் எனக்கு தெரியாது ஆனால் பிசினஸ் பண்ண தெரியும் என அவர் பேசி விட்டு செல்கிறார். இதனால் எழில் கடுப்பாகிறார்.

இதையும் படிங்க: கவுண்டமணி – செந்தில் பிரிந்தது இதனால்தான்!. சோலோவா கெத்து காட்டிய கவுண்ட்டர் மன்னன்..

எல்லாம் சரியாகட்டும் அவரை பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். ஆனால் பாக்யா நீ விடு. அந்த செஃப் லீவ் போட்டா அப்ப தெரியும் உங்களுக்கு என சொல்லிவிட்டு தங்களுடைய வேலையை தொடர்கின்றனர். பின்னர் செழியன் போன் பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் ஜெனி அவரிடம் யாரிடம் பேசுகிறாய் எதற்கு பேசுகிறாய் என விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

பின்னர் நீ எல்லா கிளைண்ட்டுடன் இன்னும் காண்டாக்ட் இருக்கியா? மாலினியிடம் இன்னும் பேசுகிறாயா? எனக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு செழியன் மாலினி நம்பரை சேவ் செய்து வைத்திருக்கிறேன் ஆனால் அவள் இனி என்னிடம் பேசக்கூடாது என்பதற்காக அதை பிளாக் செய்துதான் சேவில் வைத்திருக்கிறேன் என்கிறார்.

இதையும் படிங்க: கவுண்டமணி அப்பேற்பட்ட ஆளுதான்! விசித்ரா சொன்னதையும் தாண்டி அதெல்லாம் நடந்திருக்கு.. போட்டுடைத்த பிரபலம்

இதை தொடர்ந்து ஹாலில் ஈஸ்வரி ஜெனியின் குழந்தையை கொன்று இருக்கிறார். அப்போது அங்கு வரும் பாக்யாவிடம் அமிர்தாவை எதுக்கு தினமும் ரெஸ்டாரன்ட் கூட்டிட்டு போற. வீட்டு வேலையை யார் பார்ப்பாங்க என்கிறார். அமிர்தா நானே தான் போறேன் பாட்டி என சமாளிக்கிறார். அங்க போயிட்டு இருந்தா உனக்கும் எழிலுக்கும் எப்படி இணக்கம் வரும். எப்ப நீங்க குழந்தை பெத்துக்க போறீங்க என்கிறார்.

இதனால் ஜெனி மற்றும் பாக்யா அதிர்ச்சியாகின்றனர். மறுபடியும் அந்த கணேஷ் வந்துட்டா என்ன செய்றது. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு குழந்தை வேணும் தானே என்கிறார். இதனால் அமிர்தா கண்கள் கலங்க அந்த இடத்தை விட்டு ரூமுக்கு சென்று விடுகிறார். பின்னர் ஜெனி நீங்க பேசுனது தப்பு பாட்டி என்கிறார்.

நான் நல்லதுக்கு தான் சொன்னேன் உடனே அழுகுறதா என்கிறார் ஈஸ்வரி. ரூமில் வந்து எழில் பேச நாம் குழந்தை பெத்துக்கலாம் என்கிறார் அமிர்தா. யார் என்ன சொன்னா எனக் கேட்க ஈஸ்வரி சொன்ன விஷயத்தை கூறுகிறார். நமக்கு தோணும் போது நடக்கும் இப்ப நீ இதைப்பற்றி யோசிக்காத என அமிர்தாவை சமாதானம் செய்கிறார் எழில். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இதையும் படிங்க: என்னை விட்ருங்கப்பா!. எனக்கு சினிமாவே வேணாம்!… கவுண்டமணி முடிவெடுக்க காரணம் இதுதானாம்!…

google news
Continue Reading

More in Cinema News

To Top