Connect with us

Cinema News

மீண்டும் வேதாளம் முருங்கமரம் ஏறுது டோய்… பாக்கியா காதல் பண்றாங்களோ!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி இன்னைக்கு எல்லா டெலிவரி முடிஞ்சிது என ராதிகாவிடம் சொல்கிறார். பின்னர் செஃபை அழைத்து உங்க இஷ்டத்துக்கு இனி லீவ் போடாதீங்க. எந்த அவசரம் இருந்தாலும் என்கிட்ட கேட்கணும். எல்லாரை விட நான் நிறைய சம்பளம் தருகிறேன்ல.

இனிமே இப்படி பண்ணீங்க  வேலையை விட்டு அனுப்பிடுவேன் என மிரட்டி அனுப்புகிறார். இதனால் ராதிகா கடுப்பாகிவிடுகிறார். ஏன் இவ்வளோ? எதையுமே அளவா பேசமாட்டீங்களா? இப்படி பண்ணா அவர் மொத்தமா ஓடிருவாரு. எப்படி பிசினஸ் பண்ணலாமா யூஸ்லெஸ் என திட்டிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: சொல்லி அடிச்ச கில்லி!. குறிப்பிட்ட மாதத்தில் வெளியான எம்.ஜி.ஆரின் 12 மெகா ஹிட் படங்கள்!..

இதை கேட்டு ஷாக்காகி விடுகிறார். இவகிட்ட நான் எப்போ பார்த்தாலும் திட்டு வாங்கிட்டே  இருக்கேன். அடுத்ததாக, பாக்கியா ரெஸ்டாரெண்டுக்கு வருகிறார். அமிர்தா மற்றும் செல்வியை அழைத்து பழனிசாமி சார் அம்மா பேச கூப்பிட்டாங்க என்கிறார். ஏன் அண்ணனுக்கு பேச வெட்கமா என கலாய்க்கிறார் செல்வி.

என்னடி உளருற என்கிறார். அவர் பிறந்தநாள் பங்ஷனாம். அதுக்கு கேட்டரிங் ஆர்டர் எனக்கு கொடுத்து இருக்காங்க என்கிறார். ஓ அதான் விஷயமா என்கிறார் செல்வி. பின்னர் பங்ஷனுக்கு என்ன சமைக்கலாம் என யோசித்து சிரித்து கொண்டே எழுதுகிறார். இதை சந்தேகமாக பார்க்கிறார் செல்வி.

இதையும் படிங்க: சர்ச்சை இயக்குனரின் மூக்கை உடைத்த கௌதம் வாசுதேவ் மேனன்… என்ன சொல்லி இருக்கார் பாருங்க?

அமிர்தாவை அழைத்து அக்கா மனசுல பிரண்ட்ஷிப்பை தாண்டி என்னமோ இருக்கு என்கிறார் செல்வி. இருக்கட்டும் அதை அவங்களே சொல்லணும் எனக் கூறிவிடுகிறார் அமிர்தா. வீட்டில் செழியனுக்கு ஏழு மணிக்கு சரியாக வந்து வெயிட் செய்கிறார். ஏழரை மணிக்கு சத்தம் கேட்க என வெளியில் வந்து ஜெனி பார்க்க பாக்கியா மற்றும் அமிர்தா வருகின்றனர். கேட்டரிங் ஆர்டர் குறித்து சொல்ல சந்தோஷமடைகின்றனர்.

இதையடுத்து செழியன் எட்டு மணிக்கு வீட்டுக்கு வருகிறார். இதனால் ஜெனி கடுப்பாகி ரூமுக்கு செல்கிறார். பாக்கியா இனி லேட்டானால் ஜெனிக்கு சொல்லிடு என்கிறார். செழியனை போய் ஜெனியை சமாதானம் செய் என ராமமூர்த்தி அனுப்புவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top