Connect with us

latest news

பாக்கியா ரூட் க்ளியர்.. அப்போ பிரச்னை ஆரம்பிக்கணும்ல.. மீண்டும் வெடிக்கும் ஜெனி பஞ்சாயத்து..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராமமூர்த்தி ஈஸ்வரியுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது பாக்கியா கேண்ட்டீனில் கூட்டம் வருவதாக பரவும் வீடியோக்களை காட்டி வெறுப்பேற்றி கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியாவும் வீட்டுக்கு வருகிறார்.

இன்னைக்கு வியாபாரம் எப்படி எனக் கேட்க செமையா போச்சு மாமா. ஈஸ்வரி, ஒருநாள் போதுனு ரொம்ப செய்ய வேணாம். இப்பையும் சொல்றேன். யார் கைக்காது மாத்தி விட்ரு எனக் கூறுகிறார். எல்லாரும் அவர் சொல்வது அதிர்ச்சி ஆகிறது. ஆனால் பாக்கியா அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்.

இதையும் வாசிங்க:மகளுக்காக மீண்டும் ரெடியாகும் ரஜினி!.. குட்டிக்கதை ரெடியா சார்?!.. கேப்பு விடாம அடிச்சா எப்படி!..

பின்னர் தான் நாளை ஒரு புது ஸ்வீட்டை அறிமுகப்படுத்த போறேன். பேரு தான் யோசிக்கிறேன் என்கிறார். செல்வியும் நாங்களும் 100 பேர் சொல்லிட்டோம். அக்காக்கு எதுவுமே பிடிக்கலை எனக் கூறுகிறார். உடனே பாக்கியா தற்போது தனக்கு ஒரு பெயர் தோன்றுகிறது எனக் கூறி ராமமூர்த்தி, ஈஸ்வரி பெயரை இணைத்து ராமேஸ்வரி எனக் கூறுகிறார். 

உடனே கோபி அதெல்லாம் வேண்டாம் என ஈஸ்வரியிடம் சொல்ல சொல்ல அவரும் ஐஸ் வைக்காத என் பெயரெல்லாம் வேண்டாம் எனக் கடுப்படித்து விட்டு செல்கிறார். ஆனால் ராமமூர்த்தி நீ செய் மா என சப்போர்ட் செய்கிறார். இதனையடுத்து ஜெனி வீட்டில் ஜோசப்பும், மரியமும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஜெனியின் வாழ்க்கை இப்படி ஆச்சே எனக் கவலையில் இருக்கின்றனர்.

இதையும் வாசிங்க:தனது அப்பா கெட்டப்பில் ரஜினி நடித்த படம்!.. அப்பா மேல இவ்வளவு பாசமா?!..

அப்போது செழியன் வர ஜோசப் கடுப்பாகி அவரை கண்டப்படி திட்டி வெளியில் போக சொல்கிறார். செழியன் பாப்பாக்கு தடுப்பூசி போடணும். அந்த கார்டை கொடுக்க வந்தேன் என ஜெனியிடம் கொடுக்கிறார். அம்மா கேண்ட்டீனுக்கு வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் எனக் கூறிவிட்டு செல்கிறார். இதனை தொடர்ந்து ஜோசப் ஜெனியை இவனிடம் இருந்து டைவர்ஸ் வாங்கி வேறு கல்யாணம் செஞ்சி வைக்கணும் என்கிறார்.

ஆனால் மரியம் இதுக்கு ஜெனி ஓகே சொல்ல மாட்டா. அவளுக்கு செழியன் மீது கோபம் அவளோ தான். அவளுக்கு இன்னும் அந்த குடும்பத்தின் மீது பாசம் இருக்கு. செழியன் என்ன திட்டுனாலும் இப்படி வந்து நிக்கிறத பாத்தா அவன் அந்த பொண்ணு சொன்ன அளவுக்கு எந்த தப்பும் செய்யலை நினைக்கிறேன். நீங்க ஒரு டைம் பேசிப்பாருங்க என்கிறார்.

ஜோசப்பும் செழியனுக்கு கால் செய்து பேசணும் எனக் கூற அவரும் வருவதாக கூறிவிடுகிறார். காபி ஷாப்பில் மீட் செய்யலாம் எனக் கூறி வைத்து விடுகிறார். இதை தொடர்ந்து பாக்கியாவின் கேண்ட்டீனில் கூட்டம் அலைமோதுகிறது. அந்த நேரத்தில் கணேஷ் அங்கு வந்து நிற்கிறார். அவரை பாக்கியா பார்த்து அதிர்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் வாசிங்க: பிடிவாதம் பண்ணிய எம்ஜிஆர் மனைவி… ஆனால் கடைசில கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாங்களே!…

google news
Continue Reading

More in latest news

To Top