Connect with us

latest news

கோபி புருஷனா தோத்து இருக்கலாம்… ஆனா நல்ல அப்பா தான் போலயே… ஃபீல் பண்ண வச்சிட்டாருப்பா!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கணேஷ் தொடர்ந்து அமிர்தாவை தன்னுடன் அழைக்க அவர் வரவே மாட்டேன் என மறுத்து கொண்டு இருக்கிறார். நிலாவை தூக்க போக அவர் அப்பா என எழிலிடம் ஓடிக்கொள்கிறார். இதையடுத்து அவர் நிலாவை இழுக்க பார்க்க ராமமூர்த்தி வாங்கி கொள்கிறார்.

அமிர்தாவை என்னுடன் வா எனக் கூப்பிட அவ தான் உன்னை பார்த்தாலே பயப்படுறாள. நீ ஏன் அவகிட்ட இவ்வளோ பிடிவாதம் பிடிக்கிற எனக் கோபமாகிறார். இருந்தும் கணேஷ் தொடர்ந்து வா என கூப்பிட்டு கொண்டே இருக்கிறார்.

இதையும் படிங்க: உங்க வீட்ல ஒண்ணுன்னா ஓடி வரமாட்டீங்க.. சிம்பு, தனுஷ், விஷால், சூர்யாவை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்!

இதையெல்லாம் பார்த்த எழில் தள்ளிப்போய் படியில் உட்கார்ந்து கதறுகிறார். இதை பார்த்த கோபி, அழுகாதடா. நாங்க இருக்கோம்டா. பேசிக்கலாம் என்கிறார். இதை கேட்டவுடன் கோபியை அப்பா எனக் கட்டிக்கொண்டு அழுகிறார். நிலா ஓடிவந்து அழுகாதப்பா எனக் கூறுகிறார்.

ஆனால் கணேஷ் அவனை அப்பா சொல்ல கூடாது என பிள்ளையை இழுக்க கோபி தடுத்து விடுகிறார். நீ செத்துட்டதா நினைச்சு. அந்த கஷ்டத்தை அனுபவிச்சு வெளியில் வந்து இப்போ வேற வாழ்க்கையில் இருக்கா. மறுபடி என்கூட வானு சொன்னா எப்படி வர முடியும். கணேஷ் பெற்றோர்களோ நியாயமா பேசுங்க என்கின்றனர்.

இதையும் படிங்க: பெரியண்ணாவுக்கு பெரிய மரியாதை.. ஒரு நிமிஷம் நின்னு அஞ்சலி செலுத்த முடியாதா சூர்யா?.. ப்ளூ சட்டை பொளேர்!

ஈஸ்வரி எங்க பிள்ளைக்கு தான் பேசுவோம். அப்போ நாங்களும் எங்க பிள்ளைக்கு தான் பேசுவோம் என்கின்றனர். இப்போ நீ போகலைனா நான் போலீஸை கூப்பிடுவேன் என கோபி கூற நான் இப்போ போறேன். ஏழு நாள் டைம் அதுக்குள்ள அமிர்தாவை அனுப்பணும். இல்ல நானே போலீஸுடன் வருவேன் என மிரட்டி விட்டு செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top