Connect with us

latest news

எவ்வளோ நடந்தாலும் உங்க இம்ச மட்டும் குறையாது கோபி… ராதிகா இவ்வளவோ நல்லவங்களா ஆகிட்டா எப்படி?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மசாலா கம்பெனி இருக்கும் இடத்தினையும் ஓனர் கால செய்ய சொல்லிய விஷயம் தெரிய ஈஸ்வரி இதுவும் போச்சா என்கிறார். இதையடுத்து செல்வி என்ன செய்வது எனக் கேட்க எனக்கும் தெரியலை என்கிறார் பாக்கியா. 

தொடர்ந்து ஆனா நம்ம சீக்கிரம் மேல வருவோம் என நம்பிக்கை இருப்பதாக செல்வியிடம் கூறுகிறார் பாக்கியா. அதையடுத்து பழனிசாமி மற்றும் நண்பியை சந்திக்க வருகிறார் பாக்கியா. எதுவும் பணத்தேவை என்றால் கேட்க சொல்கிறார் பழனிசாமி.

இதையும் படிங்க: அன்பே வா படத்தில் டான்ஸில் பொளந்து கட்டிய புரட்சித்தலைவர்!.. இது எப்படி நடந்ததுன்னு தெரியுமா?

ஆனால் அதெல்லாம் வேணாம் சார். எதுவும் கேட்டரிங் ஆர்டர் இருந்தால் மட்டும் வாங்கி தர கூறுகிறார். இதையடுத்து எழிலுடன் சேர்ந்து கேட்டரிங் வீட்டை காலி செய்து எடுத்து வருகிறார். அமிர்தா, எழில், பாக்கியா, செல்வி சேர்ந்து லாரியில் இருக்கும் பொருளை பார்க்கிங் ஏரியாவில் வைக்கின்றனர்.

இதை பார்த்து வரும் கோபி பார்க்கிங்கில் இதையெல்லாம் வைத்தால் நான் எங்கே காரை நிப்பாட்டுவேன் என்கிறார். வெளியில் நிறுத்திக்கோங்க என்கின்றனர். அம்மாவுக்கு தெரியுமா எனக் கூறி ஈஸ்வரியிடம் போய் போட்டுவிட பார்க்கிறார். இதையடுத்து அவரும் வெளியில் காரை நிறுத்திக்கோப்பா எனக் கூறுகிறார்.

இதனால் கோபிக்கும் புஸ்ஸுனு போகிவிடுகிறது. அந்த வீட்டை காலி செய்தாகிவிட்டால் அவ எங்க வைக்க முடியும் என்கிறார். ராதிகா அந்த வீட்டில் காரை வெளியில் தானே விட்டீங்க என்கிறார். இதனால் கோபி இவ என்னம்மா பாக்கியாவுக்கு சப்போர்ட் பண்ணுறா. இவங்க சேர்ந்துக்கிட்டு என்னை துரத்திவிட்டா என்ன செய்கிறது?

இதையும் படிங்க: என்னங்கடா தனுஷ் டைவர்ஸ் கதை மாதிரியே இருக்கு!.. திடீரென ஜோதிகா பார்த்த வேலை.. என்ன ஆச்சு?..

போலீசுக்கும் கால் செய்வேன் என மிரட்டிவிட்டு டோரை சாத்தி விடுகிறார். இதையடுத்து வீட்டுக்கு வரும் செழியன் கோபியிடம் இன்னைக்காவது சரி ஆகிடுமா என்ற ஆசையில் தான் போனேன் என அழுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top