ஏலேய் கல்யாணத்தை முடிச்சி விடுங்கப்பா… முடியல ரொம்ப அறுக்குறீங்க… இதுக்கு அதுவே பரவாயில்லை…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மீனா இந்த விஷயத்தில் எனக்கு விருப்பமே இல்லை. லைஃப் சரியா இருக்காது கதிர். நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க. நான் அத்தைக்கிட்ட பேசுறேன் என்கிறார். ஆனால் கதிர் எங்க அம்மா என்கிட்ட கேட்ட முதல் விஷயம் இது. அவங்க யோசிக்காம எதையும் செய்ய மாட்டாங்க.

மறுப்பக்கம் கோமதிக்கு பாண்டியன் கால் செய்கிறார். என் புருஷனுக்கு தெரியாம நான் எதுவுமே செஞ்சது இல்ல. இவ்வளோ பெரிய விஷயத்தினை செய்ய போறேன். என்னால் அவர்கிட்ட இப்போ பேச முடியாது என அழுகிறார். ராஜீ எனக்கும், கதிருக்கும் ஆகாது. இந்த கல்யாணம் வேண்டாம் என்கிறார். உங்க அத்தை உனக்கு நல்லது தான் செய்வாங்க எனக் கூறிவிடுகிறார் பாக்கியா.

இதையும் படிங்க: இதைவிட ஒரு மகளுக்கு பெரிய கிரெடிட் இருக்குமா என்ன? ஐஸ்வர்யாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு

யாருமே தூங்காமல் உட்கார்ந்து இருக்க காலை விடிந்து விடுகிறது. கதிர் அறைக்கு வரும் எழில் அவருக்கு டிரெஸை எடுத்து கொடுக்கிறார். அவர் மாற்றிக்கொண்டு வர எழிலிடம் பேச வருகிறார் கோமதி. என் மேல கோபமா எனக் கேட்கிறார்.

எனக்கு எந்த கோபமும் இல்லம்மா. இந்த விஷயத்தினை பேசாதே எனக் கூறிவிட்டு வெளியில் சென்று விடுகிறார். பின்னர் எல்லாரும் சேர்ந்து கோவில் செல்கின்றனர். கதிரும், ராஜீயும் மாலை மாற்ற ரெடியாக இருக்க அவர்கள் சண்டை போட்டுக்கொள்ளும் பழைய நியாபகம் வருவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: ‘லால் சலாம்’ படத்தில் இருக்கும் ட்விஸ்ட்.. வெளிநாட்டில் மாஸ் காட்டும் ரஜினி! குவியும் பாராட்டுக்கள்

 

Related Articles

Next Story