Connect with us

Cinema News

பாக்கியாவுக்கு அடுத்த சிக்கல் ஆரம்பிச்சிடுச்சு போல… சைக்கோ நம்பர் ஒன் எண்ட்ரியா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் திடீரென பாக்கியாவுக்கு கணேஷின் அம்மா கால் செய்கிறார். இவங்க எதுக்கு கால் செய்றாங்க என யோசித்து கொண்டே அட்டர்ன் செய்கிறார். கணேஷின் அப்பாவுக்கு உடல்நலம் பெரிய சிக்கலில் இருக்கு. அவர் அமிர்தா, நிலாவை பார்க்கணும்னு கேட்பதாக சொல்லுகிறார்.

இதனால் ஷாக் ஆகிறார் பாக்கியா. சீக்கிரம் கூட்டிக்கிட்டு வாங்க எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால் எதையும் முடிவு செய்யாதீங்க. வீட்டில் பேசிவிட்டு சொல்வதாக முடித்துவிடுகிறார். பின்னர் ஈஸ்வரி, கோபி, ராதிகா உட்கார்ந்து இருக்கிறார்கள். அங்கு வரும் பாக்கியா பேச வேண்டும் என்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி பட வசனத்தை பேசி அப்பாவிடம் வாய்ப்பு கேட்ட விஜய்!.. இவ்வளவு நடந்திருக்கா!…

ராமமூர்த்தி, செழியனை அங்கு அழைக்க கணேஷின் அம்மா கால் செய்ததாக சொல்கிறார். ஏன் இப்போ பிரச்னை எனக் கேட்க கணேஷின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லையாம். அமிர்தா, நிலாவை பார்க்கணும்னு கேட்டதாக சொல்கிறார். இது எதோ ப்ளான் மாதிரி தெரியுது. முடியாது எனக் கூறிவிடு என்கிறார்.  பாக்கியாவும் அதுதான் சரி. நான் போன் செய்து கூறிவிடுகிறேன் என்கிறார். ஆனால் ஈஸ்வரி எதுக்கு கால் செய்யணும்.

எடுக்காம இரு என்கிறார். சரியென பாக்கியா கூறிவிடுகிறார். மனசு கேட்காதவர் எழில், அமிர்தாவை பார்த்து கணேஷின் அப்பா பார்க்க வேண்டும் எனக் கேட்ட விஷயத்தினையும் அவர் உடல்நிலையும் கூறிவிடுகிறார். அமிர்தா பதற நிலைமை சரியில்லை போக வேண்டாம் என்கிறார் பாக்கியா. எழில் அமிர்தாவுக்கு அவரை பார்க்கணுமா எனக் கேட்க அவர் இல்லை எனக்கு புரியுது எனக் கூறிவிடுகிறார். காலையில் பாக்கியா சமைத்து கொண்டு இருக்க மீண்டும் கணேஷ் அம்மாவிடம் இருந்து கால் வருகிறது. 

இதையும் படிங்க: விஜய் மீது இம்புட்டு பாசமா!.. தென்காசி கோயிலில் சமுத்திரகனி சொன்ன வார்த்தை.. ரசிகர்கள் செம ஹேப்பி!

எடுக்காமல் பாக்கியா இருக்க தொடர்ந்து பண்ணிக்கொண்டே இருக்கிறார். பாக்கியா போனை எடுக்க அப்பா பிழைக்க வாய்ப்பே இல்லை எனக் டாக்டர்கள் சொல்லிவிட்டதாக சொல்லிவிடுகிறார். வீட்டுக்கு வர இயலாது என பாக்கியா கூற உங்களுக்கு கணேஷ் தானே பிரச்னை. அவன் வீட்டிலே இருக்க மாட்டான். 10 நிமிஷம் நீங்களே கூட்டிவந்துட்டு கூட்டிக்கிட்டு போங்க என்கிறார். 

இதனால் குழம்பி போகிறார் பாக்கியா. போனை கட் செய்யும் கணேஷின் அம்மா அருகில் அந்த அப்பா நிற்கிறார். பக்கத்தில் கணேஷ் நிற்க பாவி பயலே ஏன் இப்படி செஞ்ச என்கிறார். எனக்கு அமிர்தாவை வர வைக்க வேற வழியே தெரியலைமா. இப்போ வர வச்சு என்ன செய்ய போற என்கிறார் கணேஷ் அப்பா. ப்ளான் இருக்கு என கணேஷ் வில்லங்கமாக சொல்கிறார்.

வீட்டில் மாடியில் இருந்து இறங்கி வருகிறார்கள் எழில் மற்றும் அமிர்தா. இப்படி கணேஷின் அப்பா உயிருக்கே நேரம் குறிச்சிவிட்டதாக அவர் சொல்லியதையும் கணேஷ் இருக்க மாட்டான் என அவர் சொன்னதையும் சொல்கிறார். எழில் வீட்டில் நான் பேசுகிறேன். நான் போகலாம் எனக் கூறுகிறார். அமிர்தா வேண்டாம் எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: விஜயின் முதல் படத்தை பாராட்டி நடிகர் திலகம் கொடுத்த அன்பளிப்பு!.. இதெல்லாம் தெரியாம போச்சே!…

google news
Continue Reading

More in Cinema News

To Top