Connect with us

Cinema News

ராதிகாவுக்கு பில்டப் கொடுக்கும் ஈஸ்வரி… மட்டம் தட்டப்படும் பாக்கியா… என்னங்கப்பா இதெல்லாம்?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எழில் மற்றும் செழியன் அமிர்தாவை தேடி அலைந்து கொண்டு இருக்கின்றனர். பின்னர் பழனிசாமி வர அவர் கவலைப்படாதீங்க. அந்த பையன் உணர்ச்சிவசப்பட்டு செய்றான். அதனால் ஈசியா அவனை கண்டுப்பிடிச்சிடலாம் என்கிறார்.

அதை தொடர்ந்து அமிர்தாவிடம் நிலா பசிக்குதும்மா என்கிறார். சாப்பாடு வேணும் என கணேஷிடம் கேட்க நான் வாங்க போனா நீ தப்பிச்சிடலாம்னு பார்க்குறீயா என்கிறார். பின்னர் நிலாவை அப்பா எனக் கூப்பிட சொல்லி தொல்லை கொடுக்கிறார். ஆனால் நிலா, எழில் அப்பாவிடம் போகணும் என்கிறார்.

இதையும் படிங்க: கதையே தெரியாமத்தான் இத்தனை நாள் சுத்திட்டு இருக்கியா!.. பிரபல ஹீரோவை பங்கமா கலாய்த்த விஜய்!..

நான் தான் உன் அப்பா. என்னை தான் அப்பானு கூப்பிடணும் என மிரட்ட நிலா பயந்து அமிர்தாவை கட்டிக்கொள்கிறார். வீட்டில் ஹாலில் ராதிகா அமர்ந்து இருக்க வாசலில் பாக்கியா பதட்டத்துடன் நிற்கிறார். அங்கு வரும் ஈஸ்வரி, பாக்கியாவை அழைத்து எழிலிடம் இருந்து எதுவும் கால் வந்துச்சா என்கிறார்.

இல்லை எனக் கூற நீ செஞ்சதுக்கு வீட்டு ஆம்பளைங்க அலைஞ்சிட்டு இருக்காங்க எனத் திட்டிவிடுகிறார். பின்னர் ராதிகா சொல்றேனு தப்பா நினைச்சிக்காதீங்க. உங்களால 5000 பேருக்கு கூட அசால்ட்டா சமைக்க முடியும். அதில் வரும் பிரச்னையை சமாளிக்க முடியும். எல்லாத்துலையும் அப்படியே இருக்கலாம் என நினைக்கிறது தப்பு என்கிறார். 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை வைத்து காஷ்மீர் ஃபைல்ஸ் எடுக்கும் கமல்?.. குற்றச்சாட்டுகளை அடுக்கும் பிரபலம்!..

அப்போ அங்கு வரும் ஈஸ்வரி என் மனசில் இருக்கத அப்படியே சொல்லிட்ட. உனக்கு நிறைய சமைச்சு பேரு வாங்குனதும் திமிரு வந்துடுச்சு என்கிறார். இவளும் தான் இருக்கா நிறைய படிச்சிருக்கா, ஒரு பெரிய கம்பெனியை நடத்துறா ஆனா எந்த பிரச்னைக்கும் போகாம எவ்வளவு அமைதியா இருக்கா என்று ராதிகாவை பாராட்டுகிறார். அடுத்து மளிகைக்கடையில் இருந்து கால் வர செல்வி பேசுகிறார்.

அப்போ பாக்கி 2034 இருப்பதாக கூற பாக்கியாவுக்கு வண்டி நம்பர் நியாபகம் வந்துவிடுகிறது. அதை செழியனுக்கு மெசேஜ் செய்கிறார். விடிஞ்சா உனக்கும், எனக்கும் கல்யாணம் என்கிறார் கணேஷ். அடுத்த நாள் விடிந்துவிடுகிறது. அமிர்தா அறையில் கணேஷ் இல்லாமல் போக வெளியில் போக அமிர்தா கதவை தட்டிக்கொண்டு இருக்கிறார். படாரென கதவு திறக்க கணேஷ் மாப்பிள்ளை உடையில் தயாராக இருக்க அதிர்ச்சியில் அமிர்தா நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: மீண்டும் முத்துவுக்கு தான் பிரச்னையா? ஸ்ருதி-ரவியை கூட்டிப்போக தயாராகும் அம்மா.. அப்பாடி!…

google news
Continue Reading

More in Cinema News

To Top