Connect with us

Cinema News

கதையே தெரியாமத்தான் இத்தனை நாள் சுத்திட்டு இருக்கியா!.. பிரபல ஹீரோவை பங்கமா கலாய்த்த விஜய்!..

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் கோட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் வைபவ். ஆனால், தனக்கு இதுவரை வெங்கட் பிரபு கதையே சொல்லவில்லை என்றும் எதுவுமே தெரியாமல் சூட்டிங் ஸ்பாட்டில் பிளான்க்காக சுற்றிக் கொண்டிருந்த என்னை பிடித்துக் கொண்டு போய் விஜய் சார் வச்சு கலாய்த்து விட்டார் என தனது சினிமா பட விழாவில் பேசியிருக்கிறார் வைபவ்.

சரோஜா படத்தில் தான் அறிமுகமானார் வைபவ். அதன் பின்னர் மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோவா படத்தில் சினேகாவுடன் ரொமான்ஸ் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்து விட்டார்.

இதையும் படிங்க: அருண் விஜய்யை அடி வெளுத்த பாலா!.. வணங்கான் வந்தா பெரிய சர்ச்சை வெடிக்கும்.. பிரபலம் சொன்ன தகவல்!..

அஜித்தின் மங்காத்தா படத்திலும் வைபவுக்கு நல்ல கேரக்டரை கொடுத்து சரியாக பயன்படுத்தியிருப்பார் வெங்கட் பிரபு. தொடர்ந்து வெங்கட் பிரபு படங்களிலேயே நடித்து வந்த வைபவ் தனியாகவும் ஹீரோவாக டமால் டுமீல், கப்பல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் உருவான ஆலம்பனா திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை.

மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் வைபவ். ஆனால், தனக்கு என்ன கதை என்றே தெரியாமல் தான் அந்த படத்தில் நடித்து வருகிறேன் என்று சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.

இதையும் படிங்க: ஐஸ்வர்யாவுக்கு பண்ண மாதிரி பண்ணிடாதீங்க பாய்!.. தனுஷுக்கு பார்த்து பண்ணுங்க!.. கெஞ்சும் ஃபேன்ஸ்!

கதையே தெரியாமத்தான் சுத்திக்கிட்டு இருக்கியா, எப்படியாவது பிரபுக்கிட்ட நைஸா பேசி கதையை கேட்டுடு என விஜய் சார் தனியா கூட்டிட்டுப் போய் கலாய்த்தார். பிரபுக்கிட்ட போய் நான் எப்படி கதை கேட்க முடியும் என்றார் வைபவ்.

ஆனால், ஒன்று மட்டும் சொல்லிக்கிறேன் படம் தாறுமாறா ரெடியாகிட்டு இருக்கு என்று சொல்ல விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top