Connect with us

Cinema News

கல்யாணம் செஞ்சிக்க போறாங்களா பாக்கியா.. ஈஸ்வரி ஓகே சொல்லணுமே.. கோபி எப்ப மாட்டுவாரு…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியிடம் ஆபிஸ் போகலையா என்கிறார் ராதிகா. போகணும் எனச் சமாளிக்கிறார். வாங்க நான் ட்ராப் செய்கிறேன் எனக் கூற இல்லை நானே உன்னை ஆபிஸில் ட்ராப் செஞ்சிட்டு போயிடுறேன் என்கிறார். பின்னர் அமிர்தா ரூமில் இருக்கிறார்.

அங்கு எழில் வந்து அவருக்கு ஜூஸ் கொடுக்கிறார். அதை வாங்கி கொள்ளும் அமிர்தா நீங்க என்னை வெறுத்துடுவீங்கனு நினைச்சேன் என்கிறார். இல்லை எனக்கு இப்போ தான் உன்மேல காதல் அதிகம் ஆகிட்டு வருது என்கிறார். இருவரும் பின்னர் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: எப்படி இப்படி ஓப்பனா இருக்கீங்க?!. கேள்வி கேட்டவருக்கு எம்.ஆர்.ராதா சொன்ன நச் பதில்!..

செந்திலுடன் ரெஸ்டாரெண்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார் கோபி. அப்போ அங்கு  பாக்கியா வருகிறார். அவரை பார்க்க பழனிசாமியும் அங்கு வருகிறார். இதை பார்த்து விடுகிறார் கோபி. இங்கு பாக்கியா, பழனிசாமியிடம் நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் சார் என்கிறார். அதெல்லாம் வேண்டாம் மேடம்.

நீங்க முதலில் ரெஸ்டாரெண்ட் வேலையை ஆரம்பிங்க. வீட்டில் பிரச்னை வந்துக்கிட்டே தான் இருக்கும். ஆனா அதுக்கு நம்ம லட்சத்தியத்தினை தள்ளிப்போட கூடாது என்கிறார். இதனையடுத்து பழனிசாமி அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அப்போ கிளம்ப இருந்த பாக்கியாவை வழிமறித்து நிற்கிறார் கோபி.

என்ன லவ்வா என்கிறார். அதுக்கு பாக்கியா, லவ்வா இருந்தா உங்களுக்கு என்ன? நான் திருட்டு வேலைலாம் உங்களை மாதிரி செய்ய மாட்டேன். எனக்கு ஒருத்தரை கல்யாணம் செஞ்சிக்கணும் நினைச்சா. வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் சம்மதம் வாங்கி என் பிள்ளைங்க முழு மனதோட தான் கல்யாணம் வாங்கிப்பேன். நீங்க கவலைப்பட வேண்டாம் எனக் கிளம்பிவிடுகிறார். அப்போ அந்த பனைமரத்தினை கல்யாணம் செஞ்சிப்பாளோ எனப் புலம்புவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது. 

இதையும் படிங்க: தொடர்ந்து அசிங்கப்படுத்தப்படும் முத்து… உண்மையை சொல்லிடுங்கப்பா… மனோஜை திட்டி தீர்த்த ரோகினி…

google news
Continue Reading

More in Cinema News

To Top