Connect with us

Cinema News

வளர்ந்து கொண்டே இருக்கும் பாக்கியா!… மொத்தமாக ராதிகாவிடம் கையும், களவுமாக சிக்கிய கோபி!…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியின் ஆபீஸ் வாசலில் நின்றுகொண்டு அவருக்கு கால் செய்கிறார் ராதிகா. போனை எடுக்கும் கோபி தான் அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கில் இருப்பதாக பொய் சொல்கிறார். இதனால் கடுப்பாகும் ராதிகா நான் உங்க ஆபிஸ் முன்னாடி தான் நிற்கிறேன்.

நீங்க எங்கிருந்தாலும் உடனே இங்கு வரவேண்டும் எனக் கூறி போனே வைத்து விடுகிறார்.  இதனால் அரண்டு போகும் கோபி அவரை காண கிளம்பி செல்கிறார். அதே நேரத்தில் அமிர்தா, செல்வி, எழில்,  ராமமூர்த்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு ரெஸ்டாரண்டை பார்க்க கிளம்பி செல்கிறார் பாக்கியா.  எங்கு எதை வைக்கலாம்  என்பது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். 

இதையும் படிங்க: மார்க்கெட் போனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மம்மூட்டி!.. முதலில் ஜோதிகா இப்போ எந்த நடிகை தெரியுமா?

அந்த நேரத்தில் திறப்பு விழாவுக்கு யாரை கூப்பிடலாம் என்ற பேச்சு எழுகிறது. இதற்கு அமிர்தா எழிலிடம் எதுவும் சினிமா நட்சத்திரங்களை கூப்பிடலாமா என கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் எழில், ’கூப்பிடலாம் ஆனால் பெரிய தொகையை கேட்பார்கள்’ என்கிறார். இதனால் பாக்கியம் வேண்டாம் எனக் கூறி விட மினிஸ்டரை கூப்பிடலாம் என்ற பேச்சு வருகிறது.

எழிலும் அதுவே சரியான ஐடியா மினிஸ்டர் வந்தால் கடைக்கும் சரியான விளம்பரம் கிடைக்கும் எனவும் கூறுகிறார். இங்கு ராதிகாவை சந்திக்க வரும் கோபி உண்மையை சொல்லாமல் மறைக்க ட்ரை செய்கிறார். இதைத் தொடர்ந்து தனக்கு எல்லாம் தெரியும் என ராதிகா கோபம் காட்டுகிறார். பல வருடங்களாக இருந்த இடம் எனக் கூறி ராதிகாவை காருக்கு அழைத்து செல்கிறார் கோபி.

இதையும் படிங்க: கஷ்டப்பட்டு நடித்த கமலின் பட வசூலை அசால்டாக முறியடித்த ராமராஜனின் படம்…

காரை ஒரு இடத்தில் நிறுத்தி இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர். நான் வந்திருந்தால் இந்த பிரச்சனை சரி செய்து இருப்பேனே என ராதிகா கேட்க கடவுளே வந்தாலும் என் பிசினஸை காப்பாற்ற முடியாத சூழ்நிலை என்கிறார் கோபி. எத்தனை பொய் சொல்லி இருக்கீங்க?  இப்போ காரை எடுக்கலைன்னா நான் இறங்கி போயிடுவேன் என்கிறார் ராதிகா.  எழில் மற்றும் ராமமூர்த்தியுடன் இணைந்து மினிஸ்டரை காண வருகிறார் பாக்யா.

அவரிடம் ரெஸ்டாரன்ட் திறக்கும் விஷயத்தை கூற அவரும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து திறந்து வைப்பதாக  உறுதி கொடுக்கிறார்.  வீட்டுக்கு வரும் ராதிகாவும் கோபியும் வாசலில் இருந்தே சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் என்னவென்று அழைத்து விசாரிக்கும் ராமமூர்த்தியிடம் சொல்ல வேணாம் என தலையசைகிறார் கோபி.  இதனால் கடுப்பில் இருக்கும் ராதிகா அவரை முறைப்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இதையும் படிங்க: விஜய் விஷயத்துல இப்படி நடந்துச்சுனா வீடியோவே போடுவாரு! யாரு அஜித்தா? பிரபலம் சொன்ன தகவல்

google news
Continue Reading

More in Cinema News

To Top