Connect with us

latest news

பாக்கியாவுக்கு பிரச்னையே அதிகம்… இதுல ஈஸ்வரி ஒன்னை இழுத்து வச்சிட்டாங்களே… சங்கமம் வேற சைட்ல!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீ குடும்பம் எழுந்து அவர் இல்லாமல் போனதை பார்த்து அதிர்ச்சி ஆகி விடுகின்றனர். தொடர்ந்து அவரை குடும்பமே அக்கம் பக்கத்தில் தேட தொடங்குகின்றனர். செழியன் காரை நிறுத்தி முகத்தினை கழுவி கொண்டு இருக்க அப்போ ஜெனி குழந்தையை கொண்டு வந்து கொடு என கவலையாக வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்.

பின்னர் பாக்கியா கால் செய்து ஏன் இப்படி செஞ்ச செழியா எனக் கேட்க என் பேர் இல்லாம பங்ஷன் வச்சாங்க. இந்த வாய்ப்பை விட்டா என் பிள்ளையும், ஜெனியும் கிடைக்காம போயிடுவானு பாட்டி தான் சொன்னாங்க என்கிறார். பின்னர் பாக்கியா எனக்கு உன் வாழ்க்கை நல்லா இருக்கணும். நீ பாட்டி, பிள்ளையை கூப்பிட்டு இங்க வா எனக் கூறிவிடுகிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் செய்ததை விட பெருசு இல்லயே! இளையராஜாவுக்காக இறங்கி வந்த வடிவேலு.. இதுதான் காரணமா

ஊரில் இருக்கும் எல்லாரும் முத்துவேல் வீட்டு முன் கூடி விடுகின்றனர். மாற்றி மாற்றி புலம்பி கொண்டுள்ளனர். அப்போ ஒருவர் நைட் ஒரு பொண்ணும், பையனும் காரில் கிளம்பி போனதாக சொல்ல அதிர்ச்சி அடைகிறார். சக்திவேல் மனைவி சென்று ரூமில் லெட்டர் எதுவும் இருக்கா எனப் பார்க்க போக அங்கே நகை இல்லாமல் போனதை பார்க்க ஷாக்காகி விடுகிறார்.

பழனி இந்த விஷயத்தினை வந்து பாண்டியன் குடும்பத்திடம் சொல்லி அழுகிறார். அவரும் அதிர்ச்சியாகி தன்னுடைய மகன்களை தேட சொல்கிறார். ராஜீ, கண்ணன் இருவரும் ஹோட்டலுக்கு வருகின்றனர். ராஜீ வீட்டை நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார். வீட்டுக்கு போகணும் என புலம்புகிறார். இதை பார்த்த பாக்கியாவுக்கு சந்தேகமாகி விடுகிறது.

இதையும் படிங்க: வயசான மாதிரி இருக்கும்! விஜயகாந்த் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த நடிகை யார் தெரியுமா?

கோபி ஆறுதல் சொல்கிறார். பாண்டியன் கோபமாக நடப்பதை பார்த்து கொண்டு இருக்கிறார். இருந்தும் ஊர்காரர்கள் பேசுக்கொண்டு இருப்பதால் சக்திவேல் கோபமாகி கத்தி கொண்டு இருக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட்  முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top