Connect with us

latest news

பாக்கியாவே விட்டா ஓடிடுவாங்க போல… இதுல இந்த சங்கமம் தொல்லை வேறையா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் முத்துவேலை அந்த ஊர்காரர்கள் மோசமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ அங்கு வரும் பாண்டியன் ஏன் இப்படி பேசுறீங்க? அவங்களே பொண்ணை காணும் தவிச்சு போய் இருக்காங்க. இப்போ இதை பேசணுமா என்கிறார். எனக்கும் பொண்ணு இருக்கு, உங்களுக்கும் பொண்ணு இருக்கு கொஞ்சம் அமைதியா இருங்க என அடக்கி விடுகிறார்.

ஹோட்டலில் இருக்கும் ராஜீ போனை ஆன் செய்து அம்மா அனுப்பிய வாய்ஸ் மெசேஜை கேட்கிறார். பின்னர் பாத்ரூமில் இருந்து வரும் கண்ணன் போனை பிடுங்கிவிடுகிறார். மீண்டும் வீட்டுக்கு போகணும். இல்ல அவங்களிடம் பேசி விடுகிறேன் என ராஜீ புலம்ப போனை வாங்கி உடைத்து விடுகிறார். நாளைக்கு நமக்கு கல்யாணம் என ஷாக் கொடுக்கிறார். அது முடிந்ததும் வீட்டுக்கு போகலாம் என்கிறார். பின்னர் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா என ராஜீயை பேசி பாத்ரூமுக்குள் அனுப்புகிறான்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா!.. இந்த டைம்ல இப்படியெல்லாம் நடிக்கணுமா செல்லம்!..

பாக்கியா டீமில் கோமதி மற்றும் மீனா இணைந்து சமைத்து கொண்டு இருக்கின்றனர். வேலையும் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. எல்லாம் முடிய போகுது எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அமைச்சர் அனுப்பிய ஆட்களை எழில் சொல்லி கொடுத்து வேலை வாங்கி கொண்டு இருக்கிறார். அந்த சமயத்தில் கூட்டத்துக்கு 200 பேர் அதிகம் வந்து விட்டதாக கூற எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அப்போ கோமதி கொஞ்சம் சப்பாத்தி, குருமா செய்து விடலாம் எனக் கூற நல்ல ஐடியா என்று அதையே செய்ய தொடங்குகின்றனர். இதற்கிடையில்  குன்னக்குடியில் பாண்டியன் மகன்களும் ராஜீயை தேடி அலைகின்றனர். ஹோட்டல் ரூமில், ராஜீ பெட்டியில் இருந்த நகையை எடுத்து தன்னுடைய பேக்கில் வைத்து கொண்டு விடுகிறான். அப்போ ராஜீ வர சாப்பிட கூப்பிட எனக்கு வேண்டாம் என்கிறார்.

இதையும் படிங்க: என் அப்பாவை பத்தி பேச ஒண்ணுமே இல்லை!.. ஆர்ஜே பாலாஜி குடும்பத்துல இவ்ளோ பிரச்சனையா?..

இந்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வர அவர்கள் திட்டி சாபம் விடுகின்றனர். ஒரு கட்டத்தில் கை எடுத்து கும்பிட்ட முத்துவேல் என் பொண்ணு ஓடிப்போயிட்டா இந்த கல்யாணம் நடக்காது எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top