Connect with us

latest news

ஜட்ஜிடமே மல்லுக்கு நின்ன ஈஸ்வரி.. ஏம்மா அவர என்ன உங்க மருமக பாக்கியானா நினைச்சீங்க!..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் செழியன் மற்றும் ஜெனியின் விவகாரத்து வழக்கு தொடங்குகிறது. அதில் ஜெனியின் வக்கீல் வாதாட வருகிறார். செழியன் அருகில் இருந்த ஜெனியை பார்த்து கொண்டு இருக்கிறார். ஆனால் ஜெனியின் அப்பா அவரை அந்த பக்கம் தள்ளி வைக்கிறார்.

இதில் ஜெனி வக்கீல் எழுந்து என்னுடைய கட்சிக்காரர் வீட்டினரை எதிர்த்து வந்து செழியனை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. சண்டையை சகிச்சு கொண்டு வந்தார். ஆனால் மாலினியுடன் செழியன் தப்பான உறவில் இருப்பதால் தற்போது விவகாரத்து கேட்பதாக வாதிட்டார்.

இதையும் படிங்க: விவகாரமான ரம்பா பேட்டி!.. வேட்டையன் படத்தில் கரன்ட் கட் ஆகிடப் போகுது.. புளூ சட்டை மாறன் தாக்கு!..

இதில் கடுப்பான ஈஸ்வரி என்னையா பொய் சொல்றீங்களா? அவ தானே கோச்சிக்கிட்டு வந்தா எனச் சத்தம் போட ஜட்ஜ் இப்படிலாம் பேசக்கூடாது என்கிறார். இல்ல உங்க மேல கோர்ட்டை அவமதிச்சதா வழக்கு போடுவேன் என்கிறார். இங்க இருந்து பேசக்கூடாதா நான் கிட்ட வரேன் என ஜட்ஜ் கிட்டையே போய் பேசுகிறார்.

இப்போ நீங்க நிறுத்தல என ஜட்ஜ் சொல்ல வருவதற்குள் கோபி வந்து மன்னிப்பு கேட்கிறார். மல்லுக்கட்டி ஈஸ்வரியை வெளியில் அழைத்து வருகிறார். ஏன்மா பேசுனீங்க ஜெயில்ல போட்டுருவாங்க என பயம் காட்டுகிறார். நம்ம செழியனுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே எனக் கேட்க நீங்க அமைதியா இருந்தா ஆகாது என கோபி உள்ளே செல்கிறார்.

இதையும் படிங்க: மீனாவும், முத்துவும் ரொமான்ஸ் பண்ணுற சீன்லாம் வைக்கிறாங்கப்பா!.. ஒரே குஷி தான் போல!

கோர்ட்டில் செழியன் வெளியில் உட்கார்ந்து இருக்க ஜெனிக்கு திடீரென விக்கல் வருகிறது. உடனே காரில் இருக்கும் வாட்டர் கேனை எடுத்து வந்து கொடுக்க அதை ஜெனி மறுக்காமல் வாங்கி குடிக்கிறார். இதனால் செழியன் மனம் நிம்மதி அடைவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது. 

google news
Continue Reading

More in latest news

To Top