Connect with us

Cinema News

களைக்கட்டும் கோபி தொழில்… சுணங்கும் பாக்கியா… டைரக்டர் சாரே ஏன் இப்படி?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மயூவை வீட்டுக்கு அழைத்து வருகிறார் பாக்கியா. ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பவர் மயூவை பார்த்து எதுவும் சொல்லாமல் விடுகிறார். பின்னர் ராமமூர்த்தி துணியை காய போட்டு மாடிக்கு சென்று வருகிறார்.

பாக்கியா இதை செய்யாதீங்க எனக் கூற சரியென என்கிறார். பின்னர் மயூ மற்றும் பாக்கியா பேசிக்கொண்டு இருக்க அங்கே வருகிறார் ராதிகா. மயூவை பார்த்து ஆச்சரியமாக கேட்க தான் வெயிட் செய்த விஷயத்தினை கூறுகிறார். கடைக்கு போயிட்டு கூட்டி வந்ததாக பாக்கியா சொல்கிறார். 

இதையும் படிங்க: இத்தனை கமல் படங்களை மிஸ் பண்ண இதுதான் காரணம்!.. வடிவேலுவைவிட நான் பாக்கியசாலி.. வையாபுரி பேச்சு!..

மயூ பாத்ரூம் சென்ற நேரத்தில் இங்கையே இருந்துக்கலாமே அவ என பாக்கியா கேட்க ராதிகா நான் இருக்கதே சரியா தப்பானு தெரியலை என்கிறார். பின்னர் மயூவை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்கிறார். பின்னர் கோபியின் புதிய ரெஸ்டாரெண்டுக்கு குடும்பத்தை அழைத்து வருகிறார். இனியா இங்கையும் உங்க பெயர் தான் என்கிறார்.

இதனால் ஈஸ்வரி வெட்கப்படுகிறார். செழியன் ஏற்கனவே அம்மா பிராண்டுக்கெல்லாம் பாட்டியோட பெயரை வச்சிருக்காங்க. நீங்களும் அந்த பெயரையே வச்சிருக்கீங்க. குழப்பம் வராதா எனக் கேட்கிறார். நான் எங்க அம்மா பெயரை வச்சிருக்கேன். குழப்பம் வந்தா பாக்கியா பெயரை மாத்திக்கட்டும் என்கிறார்.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. மனோஜால் விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகினி…போச்சா?

இதையடுத்து ரிப்பனை கட் செய்து எல்லாரும் கிச்சனுக்குள் செல்கின்றனர். எல்லாரும் விளக்கு ஏற்றி தொடங்கி வைக்கின்றனர். வாழ்த்துக்களை சொல்லி கொண்டு இருக்கின்றனர். பாக்கியா ரெஸ்டாரெண்ட்டில் கூட்டம் கம்மியாகவே இருக்கிறது. லாபம் இல்லை. அதை மாதிரி வீணாகவில்லை என்கிறார் அமிர்தா.
google news
Continue Reading

More in Cinema News

To Top