Connect with us

Cinema News

சூடுபிடிக்கும் செழியன் – ஜெனி பிரச்னை… ஆத்தாடி முடிச்சி விட போறாங்க போல! தப்பிச்சோம்..

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மாலினி வீட்டில் செழியன் கத்திக்கொண்டு இருக்கிறார். நான் கல்யாணம் பண்ணிக்கலைனு சொன்னனா? நீ தான் செண்டிமெண்ட் கதையை சொல்லி ஏமாத்துன எனத் திட்டிக்கொண்டே இருக்கிறார். இதையடுத்து, ஜெனி என்னைவிட்டு போனா உன்னை சும்மா விடமாட்டேன் என்கிறார்.

வெளியில் வரும் செழியன் எழிலை பார்க்கிறார். நீ ஏன் இங்க வந்த? இவள்கிட்ட கத்துனா என்ன ஆகப்போகுது? உன் பிரச்னையை எப்படி முடிக்கிறதுனு யோசிப்போம் எனக் கூறி கிளம்பி செல்கின்றனர். அதை தொடர்ந்து எழில், பாக்கியாவை பார்த்து நடந்த விஷயங்களை கூறுகிறார். பின்னர் பாக்கியா மரியமை பார்த்து ஜெனியையும், செழியனை தனியாக பேச வைத்தால் இந்த பிரச்னை சரியாகும் எனக் கேட்கிறார்.

இதையும் படிங்க: என்னால பாட முடியாது!. கமலால் மட்டும்தான் முடியும்!.. எஸ்.பி.பி.யையே மிரள வைத்த பாடல் எது தெரியுமா?..

இதையடுத்து, மரியம் என்னால் எந்த உதவியும் இதில் செய்ய முடியாது எனவும் கூறிவிடுகிறார். பின்னர் பாக்கியா கிளம்பி ரெஸ்டாரெண்டுக்கு வர அங்கு வாசலில் நின்று செல்வி எல்லாரையும் சாப்பிட வாங்க எனக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். அதை பார்த்து இங்க என்ன பண்ணிட்டு இருக்க எனவும் கேட்கிறார். சும்மா பிசினஸ் டெவலப் பண்ண தான் எனவும் கூறுகிறார். அதெல்லாம் சரி பண்ணிக்கலாம் வா என அழைத்துச் செல்கிறார்.

பாக்கியா காலேஜுக்கு வந்து இனியாவை பார்க்கிறார். ரெஸ்டாரெண்ட் டெவலப் செய்ற வரை கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ண முடியாது என பாக்கியா கூற அதெல்லாம் பரவாயில்லை. நான் இப்போ நிம்மதியா இருக்கேன் என இனியா நக்கல் செய்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: முத்துவை வச்சு பெருசா ப்ளான் போடும் ஸ்ருதி குடும்பம்… நடக்குமா? ரோகினி மாட்டுவாங்களா இல்லையா?

google news
Continue Reading

More in Cinema News

To Top