தன்னுடைய நரி வேலையை காட்டிய கோபி… அப்போ நீங்க இன்னமும் திருந்தலையா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன்னர் ஈஸ்வரியை சந்திக்க வருகிறார் கோபி. நான் ராதிகா விஷயத்தினை தவிர எதில் தப்பா இருந்தேன். எல்லாருக்கும் ஒன்னுனா ஓடுனேன். அப்பா என் காதலை அழிச்சு அவர் பிரண்ட் பொண்ணுக்கு என்னை கட்டி வச்சாரு. என் வாழ்க்கை போனாலும் உங்க எல்லாருக்கும் நான் சரியாக தான் இருந்தேன் என பேசுகிறார்.

முதலில் கோபமாக வாதம் செய்யும் ஈஸ்வரி பின்னர் கவலையாகிறார். முன்னாடிலாம் இந்த வீட்டுக்கு எப்போ வேண்டும் என்றாலும் வரலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போ அப்படி இல்லை. என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருப்பதாக ஓவர் டிராமா போடுகிறார். இதை கேட்கும் ஈஸ்வரி இப்போ என்ன செய்யணும் சொல்ற என்கிறார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை அசிங்கமாக திட்டிய சக நடிகர்!.. பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!…

நீங்களும் என் கூட வந்துடணும் எனக் கேட்க அதெல்லாம் முடியாது என்கிறார். அப்போ நான் செத்துடுவேன் என மிரட்டியே காரியத்தினை சாதிக்கும் கோபியிடம் அவர் வருவதாக சம்மதம் சொல்கிறார். வெளியில் வரும் கோபி தன் கண்ணீரை உடனே மாற்றி கொள்கிறார். அப்போ எழில் மற்றும் பாக்கியா பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

என அவமானப்படுத்தின சந்தோஷத்துல பேசிகிட்டு இருக்கீங்களா என கேட்கிறார். எழிலை பார்த்து உன் இஷ்டத்தில் நான் உனக்கு எவ்வளவு சப்போர்ட்டா இருந்தேன் என கோபி கேட்க அது உங்கள் கடமை என்கிறார் எழில். இதை எடுத்து இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்க போற விஷயம் உங்களுக்கு பெரிய பல்பு தான் கொடுக்கப்போகிறது என கோபி மனதில் நினைத்துக் கொண்டு பாடி ரூமுக்கு செல்கிறார். அங்கு செல்லும் கோபி ராதிகாவிடம் அம்மாவும் நம்மளுடன் வீட்டிற்கு வரப்போவதாக கூறுகிறார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாணியில் கதை சொல்லி ராமராஜனை சம்மதிக்க வைத்த பிரபலம்!.. அட அந்த படமா?!…

இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் ராதிகா அவங்க எதுக்கு நம்ம கூட வரணும் அது சரியா வராது. உங்க அம்மாக்கு என்னையும் பிடிக்காது எங்க அம்மாவையும் பிடிக்காது அவங்க எப்படி நம்ம கூட இருப்பாங்க என்கிறார். எங்க அம்மாக்கு நான் தான். எனக்கு எங்க அம்மா தான். நீ மட்டும் உங்க அம்மா கூட இருக்க இல்ல. நானும் எங்க அம்மா கூட தான் இருப்பேன். அவங்க நம்ம கூட தான் வர போறாங்க என்னை பிடிவாதமாக கூற ராதிகா கவலையுடன் பார்க்கிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

 

Related Articles

Next Story