முதல் நாளே ஈஸ்வரி ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கே… கோபிக்கு இது தேவைதான்?

0
520

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகா கோபியை அழைத்து சாப்பிட உட்காருகிறார். மயூவை அழைக்க கமலா இன்னொரு நாள் ஒன்னா சாப்பிடுங்க இப்ப நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க என்கிறார். கோபி இருங்க நான் அம்மாவ கூட்டிட்டு வந்துடறேன்னு போய் ஈஸ்வரியை சாப்பிட அழைத்து வருகிறார்.

சாப்பிட உட்காரும் ஈஸ்வரிக்கு கோபி அவல் உப்புமாவை தட்டில் போட என்னது இது என ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். அவல் உப்புமா என கோபி கூற இதை யாரும் நைட்டு சாப்பிடுவாங்களா என்கிறார் ஈஸ்வரி. கமலா சாப்பிடுவோம் என பதிலடி கொடுக்கிறார். சப்பாத்தி செய்ய வேண்டியது தானே என ஈஸ்வரி கேட்க இத்தனை பேர் யாரு சப்பாத்தி தேய்ச்சிட்டி இருக்கிறது என பதில் பேசுகிறார்.

இதையும் படிங்க: கல்யாண நாளில் கலகம் செய்ய வரும் சத்யா… ஓவரா பேசும் மனோஜ்… வயித்தெரிச்சலா இருக்கே!

கோபி இன்னைக்கு மட்டும் பொறுத்துக்கோம்மா. நாளையிலிருந்து உனக்கு சப்பாத்தி போட சொல்கிறேன் என்கிறார். சரி இந்த உப்புமாவுக்கு தொட்டுக்க இதுக்கெல்லாம் யாரும் தொட்டுக்க செய்வாங்களா என்கிறார் கமலா. கடுப்பான ஈஸ்வரி இதுல உப்பே இல்ல என்க பிபி இருக்கு அதனால தான் உப்பு கம்மியா போட்டு இருக்கு என்கிறார் கமலா. இதெல்லாம் ஒரு சாப்பாடா. விரைவிரையா இருக்கு என சத்தம் போடுகிறார்.

இதனால் கமலா மட்டும் ராதிகா இருவரும் அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகின்றனர். பின்னர் ராமமூர்த்தி தனியாக இருப்பாரோ என நினைத்து எழில் மற்றும் அமிர்தா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போ அங்கு பாக்கியா வருகிறார். நான் ஈஸ்வரி போனதால் கவலையில் இருப்பேன்னு நினைச்சு வந்து பேசிகிட்டு இருக்கான். கோபி பிள்ளை பாசத்துல அவளை ஏமாற்றிக்கிட்டு இருக்கான்.

இதையும் படிங்க: இளையராஜாவை அவமானப்படுத்திய பாலச்சந்தர்!.. இருவரும் பிரிந்ததன் உண்மையான காரணம் இதுதான்!..

அவளை பட்டு திருந்தி வருவாள் என்கிறார்.  அடுத்ததாக, கமலா வந்த ராதிகாவிடம் இருக்கதே ரெண்டு உன் மாமியார் எங்க தங்குவாங்க என்கிறார். இதனால் இது பற்றி பேச ராதிகா கோபியை தனியாக அழைக்கிறார். ஆனால் ஈஸ்வரி மிரட்ட விஷயத்தை அங்கேயே உடைக்கிறார் ராதிகா. இருக்கதே ரெண்டு ரூம். ஒன்னுல நாங்க இருக்கோம். இன்னும் இல்லை எங்க அம்மாவும் மயூவும் இருக்காங்க என்கிறார். இதில் உங்க அம்மா எங்க தங்கறது என ராதிகா கேட்கிறார்.

உங்க அம்மாவை ஹாலில் படுத்துக்க சொல்லு. மயூவை உங்க கூட ரூம்ல படுத்துக்க சொல்லு. நான் போய் அந்த ரூம்ல தூங்குறேன் என ஈஸ்வரி தன் பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே செல்வது மட்டுமல்லாமல் கமலா துணிகளையும் கொண்டு வந்து ஹாலில் வைத்துவிட்டு போய் அவர் ரூமை கூட்டிக் கொள்கிறார். இதனால் ராதிகா கடுப்பாக இருக்க, கோபி நீங்க மூணு பேரும் நம்ம ரூம்ல தூங்குங்க. நான் ஹாலில் படுத்துக்கொள்கிறேன் என்கிறார்.

கடுப்பாகும் கமலா பாயை எடுத்து வந்து ஹாலில் போட்டு நாங்க இங்கேயே தூங்குகிறோம் எனக் கூறி விடுகிறார். ரூமுக்குள் அழைத்துச் செல்லும் ராதிகா, கோபியிடம் உங்க அம்மா மாதிரி சுயநலவாதி நான் பார்த்ததே இல்லை. அவங்க ரூம்ல தூங்கணும். என் பொண்ணு, எங்க அம்மாவும் ஹாலில் தூங்கனுமா. இன்னும் உங்களுக்கு ரெண்டு நாள் தான் டைம். உடனே அவங்களை இங்கே இருந்து அனுப்பிடுங்க என ராதிகா மிரட்டி விட்டு செல்வதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இதையும் படிங்க: ஜெமினியை தன்னுடன் நடிக்க வைக்க விரும்பாத எம்ஜிஆர்! இப்படிலாமா யோசிப்பாரு நம் பொன்மனச்செம்மல்?

google news