More
Categories: Cinema News latest news television

பாக்கியலட்சுமி: பில்லு கட்ட காசு இல்ல.. இதுல ஜுவல்லா?… கோபி சார் நீங்க காலி தான் போலயே..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கணேஷின் அப்பாவும், அம்மாவும் பாக்கியாவை பார்த்து பேசுகின்றனர். அப்போ கணேஷ் உயிருடன் வந்த விஷயத்தினை கூற பாக்கியா அதிர்ச்சியாகி விடுகிறார். பின்னர் அமிர்தாவை தேடி கணேஷ் வந்த விஷயம் சொல்லவும் அவருக்கு மேலும் எழில் வாழ்க்கையின் மீது பயம் வருகிறது.

அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க. நிலாவையும் சேர்த்து மூணு பேரும் குடும்பமா வாழ்றாங்க இப்போ என்ன பிரச்னை என பாக்கியா கேட்கிறார். தொடர்ச்சியாக கணேஷ் பிடிவாதமாக இருப்பதை கூறியவுடன் அவர் போட்டோ இருக்கா எனக் கேட்கிறார்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:அந்த நடிகர் மாதிரி நடிங்க!. ரஜினியிடம் வாயை விட்டு மாட்டிகொண்டு முழித்த பிரபல இயக்குனர்…

அதை தொடர்ந்து கணேஷின் புகைப்படத்தினை காட்டுகின்றனர். பாக்கியா இவரை நானே இரண்டு முறை பார்த்தேன் என கூறவும் கணேஷின் அம்மா அழத்தொடங்கி விடுகிறார். எங்களுக்கு மூன்று பேருமே முக்கியம் தான். அதனால் தான் இந்த விஷயத்தினை உங்களிடம் எடுத்துட்டு வந்தோம் என்கின்றனர்.

அடுத்த காட்சியில் வீட்டில் இருக்கும் ராதிகாவும், மயுவும் தீவிரமாக ஐடியா செய்து கொண்டு இருக்கின்றனர். அதுகுறித்து கோபி கேட்கவும் எங்க அம்மாக்கு 60வது பிறந்தநாளுக்கு பெரிய கிப்ட் கொடுக்கணும் என்கிறார். கொடுக்கலாமே என கோபியும் சில ஐடியாக்கள் கொடுக்க, கடைசியில் நகை வாங்கலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர்.

அதையடுத்து கோபியிடம் ராதிகா 2 லட்சம் எடுத்து கொண்டு மாலை வந்துடுங்க என்கிறார். நானா? எனக் கேட்க ஆமா, இப்போ பேசுனதெல்லாம் உங்க கிப்ட்டுக்கு தான். நான் என் கிப்ட்டை முடிவு செய்து விட்டேன் என்கிறார். இதனால் கோபி அதிர்ச்சி அடைகிறார். அந்த நேரத்தில் மீண்டும் இன்னொரு பேங்கில் இருந்து கிரெடிட் கார்ட் கடனை அடைக்க கூறி கால் வருகிறது.

இதையும் வாசிங்க:டைரக்டர் ஆகலன்னா இந்த வேலையத்தான் செஞ்சிருப்பேன்!. லோகேஷுக்கு இப்படி ஒரு ஆசையா?!…

கொஞ்சம் டைம் கொடுங்கள் எனக் கூறி கோபி பேசி வைக்கிறார். வீட்டுக்கு வரும் பாக்கியா கவலையில் வருவதை பார்த்து அமிர்தா என்னவென்று கேட்க வெயில் தான் என சொல்லி சமாளித்து விடுகிறார். பின்னர் அமிர்தாவை அமர வைத்து கணேஷ் எப்படி இறந்தார் என விசாரிக்கிறார். அவரும் கணேஷ் இறந்த கதையை சொல்ல தொடங்குகிறார். இதை கேட்டு கொண்டு இருக்கும் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

பின்னர், நிலாவை பார்க் அழைக்கிறார் ராமமூர்த்தி. ஆனால் பதறிய பாக்கியா நிலாவை எங்கும் கூட்டி செல்ல வேண்டாம். இங்கையே விளையாடட்டும் என்கிறார். இதனை பார்த்த ஈஸ்வரி ஏன் இப்போ போக வேணாம் சொல்ற எனக் கேட்க பாக்கியா என்ன சொல்வதென்று தெரியாமல் அதிர்ச்சியாக நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Published by
Akhilan

Recent Posts