Connect with us

latest news

எல்லா செட்டப்புக்குமே துளிர் விட்டு போச்சு போல.. செழியனை கதறவிடும் மாலினி… கடுப்பாகும் பாக்கியா..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா குடும்பத்திடன் நினைத்ததுக்கு மாறாக கோபி வீட்டில் வந்து நிற்கிறார். அவரை பார்த்ததும் அனைவருமே கோபப்படுகின்றனர். எழில் எதுக்கு தாத்தா இவரு இங்க வந்தாரு. கேளுங்க தாத்தா என சத்தம் போடுகிறார். 

உடனே ஈஸ்வரி அங்க இருந்தா என் பிள்ளைக்கு ஏதாவது ஆகிடும்ன்னு தான் கூட்டிட்டு வந்திட்டேன் என்கிறார். இவர் இருந்தா இங்க எல்லாருக்குமே கஷ்டம் தான் என சூடாக பேசுகிறார். தொடர்ந்து பாக்கியாவுக்கு எதும் ஆகிடும் என சண்டை போடுகிறார். ஆனால் ஈஸ்வரி விடாப்பிடியாக கோபியை ரூமுக்கு அழைத்து செல்ல கூறுகிறார்.

இதையும் படிங்க: காக்கானு சொல்லி இத்தன நாளா ஏமாத்திருக்காங்க! பராசக்தி படத்தின் ‘கா..கா..கா’ பாடலில் இருக்கும் ட்விஸ்ட்…

உடனே எழில் அப்போ அம்மா ஹாலில் தூங்கணுமா என்கிறார். என் ரூம்மில் கோபி இருக்கட்டும் என்கிறார் ஈஸ்வரி. ரூமில் இருக்கும் கோபி அங்க என்னால் எதுவுமே பேச முடியலைமா. என்னால இங்க இருக்க முடியாது. இது பாக்கியா வீடு நான் அங்கையே போய்டுறேன் என்கிறார்.

இருந்தும் விடாப்பிடியாக ஈஸ்வரி உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நீ இங்க தான் இருக்கணும். அங்க போனா உன்னை நினைச்சு எனக்கு எதுவும் ஆகிடும் என கவலையாக சொல்கிறார். உடனே கோபி அப்படி எல்லாம் பேசாதீங்கம்மா. நான் இங்கயே இருக்கேன் என சொல்லிவிடுகிறார்.

இதையடுத்து வெளியில் வரும் ஈஸ்வரி, உன்னை நினைத்தே எனக்கு ஏதாவது ஆகிவிடும் என மிரட்டு தான் கோபியை அழைத்து வந்துள்ளேன். அவன் இங்க இருக்குற வரை யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று கறாராக சொல்லி விட்டு செல்கிறார். உடனே பாக்யா தான் இந்த வீட்டை விட்டு கிளம்ப போகிறார். ஜெனி, எழில், அமிர்ந்தா, ராமமூர்த்தி அவரை தடுத்து விடுகின்றார்.

உனக்கு இதுனால எந்த பிரச்சனையும் வராதுமா. நாங்க எல்லாரும் உன் பக்கம் தான். அவனுக்கு எல்லாம் சரியானவுடன் நானே அனுப்பி விடுகிறேன் என்கிறார் ராமமூர்த்தி. நீ எங்கையும் போக கூடாது எனக்கூறி தன் மீது சத்தியம் வாங்கி கொள்கிறார். இதையடுத்து ராதிகா வீட்டில் அவர் அம்மாவுடன் பேசி கொண்டு இருக்கிறார். போலீஸிடம் போலாமா? எனக் கேட்கிறார்.

ஆனால் அப்படி எல்லாம் அவரை அடம் செய்து இங்க கூட்டிட்டு வர வேணாம். உன்னால தான் அவரை கல்யாணம் செஞ்சிச்சேன் என தாயை திட்டுகிறார். வீட்டுக்கு வரும் மயூவிடம் இந்த விஷயத்தினை சொல்லிவிடுகின்றனர். அடுத்தநாள் செழியனை காண பாக்கியா வீட்டுக்கு வருகிறார் மாலினி. இதனால் செழியன் ஷாக் ஆகி விடுகிறார். 

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ஸ்டேஷனில் ரவியை பிரித்து மேய்ந்த முத்து… தடாலடியாக பதில் சொன்ன ஸ்ருதி!

உள்ளே வரும் மாலினி பொய்யாக செழியன் என்னிடம் கலகலப்பாக பேசுவார் என அடித்து விடுகிறார். தொடர்ந்து ஜெனி, பாக்கியா ஷாக் விடுகின்றனர். அடுத்து சும்மா என சமாளித்து விடுகிறார். ஜெனி ரூமுக்கு சென்று விட பாக்கியாவிடம் காபி கேட்டு அனுப்புகிறார் மாலினி. சமையல் கட்டில் இருக்கும் செல்வி மாலினி மீது சந்தேகமாக இருப்பதாக கூறுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top