More
Categories: Biggboss Tamil 7 latest news television

ஒரே நாளில் இத்தனை ஷாக்கா… இரண்டு அவுட்டு.. அஞ்சு எண்ட்ரி… ஆனா இது மட்டும் மாறாது போலயே..!

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இருந்து இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 5 பேர் உள்ளே வந்திருக்கும் நிலையில், இது சற்று எதிர்பாராத நிகழ்வு தான் என்கின்றனர் ரசிகர்கள்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 4 வாரம் முடிந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இல்லாமல் பல புதுமையான விஷயங்களை டீம் செய்து இருப்பதாக ப்ரோமோட் செய்யப்பட்டது. இதற்கு பலரும் செம எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

இதையும் படிங்க: இன்னொரு தபா அஜித் படம் பண்ணுவீங்களா!.. சிறுத்தை சிவா ரியாக்‌ஷன் தான் செம!.. ரொம்ப அடிவாங்கியிருப்பாரோ?..

இரண்டாவது வீட்டில் இருப்பவர்கள் தான் சமைக்கணும் என அறிவிப்பு வந்த போது பெரிய டாஸ்க் இருக்கும் என தான் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அங்க தான் டீம் ட்விஸ்ட் வைத்தது போல. ஒரு வார டாஸ்க் கூட இல்லாமல் கிட்டத்தட்ட போட்டியாளர்கள் பேசியே காலத்தினை ஓட்டினர்.

அவர்களால் முடிந்த அளவு கண்டெண்ட் கொடுத்து கொஞ்சமாது நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைத்து வருகின்றனர். கடந்த சில வார எலிமினேஷன் கூட எதிர்பார்த்த ஒன்றாக தான் இருந்தது. ஆனால் இந்த வாரம் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற ஹேஸ்டேக்குக்கு ஏற்ப இரண்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த படம்- ஐயா தலைவரே! தெரிஞ்சுதான் சொன்னீங்களா? லியோ குறித்து ரஜினி கருத்து

இதில் முதல் போட்டியாளராக வெளியேறியவர் வினுஷா. இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமானவர். இவர் செமையாக கேம் ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில் அம்மணி வந்ததில் இருந்து சமைத்து கொடுத்தே காலத்தினை ஓட்டினார். அதனால் ரசிகர்கள் ஓட்டு இல்லாமல் வெளியேறிவிட்டார்.

இதில் இரண்டாம் எலிமினேஷன் தான் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆளாக யுகேந்திரன் வெளியேறி இருக்கிறார். இன்னும் சில காலம் இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் இந்த வெளியேற்றம் எதிர்பார்க்காதது தான் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த வாரம் ஒரே நேரத்தில் விஜே அர்ச்சனா, அன்னா பாரதி, கானா பாலா, டிஜே ப்ராவோ, தினேஷ் ஆகியோர் எண்ட்ரி கொடுக்க இருக்கின்றனர். இதற்கிடையில் இந்த வாரத்துக்கான கேப்டன் டாஸ்கில் பூர்ணிமாவுக்காக மாயாவும், விஷ்ணுவும் ஆடி மணியையும், ஜோவிக்காவையும் தோற்கடித்தனர். இதையடுத்து பூர்ணிமா மீண்டும் வீட்டின் கேப்டனாகி இருக்கிறார்.

பிக்பாஸில் எப்பையுமே டீம் சேர்ந்து ஆடினால் கடைசியில் பல்ப் வாங்கி வெளியேறும் நிலை தான் நிறைய முறை நடந்து இருக்கிறது. இதனால் ஜோவிகாவின் சப்போர்ட் இணையத்தில் உயர்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பூர்ணிமா விரைவில் வெளியேறக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Akhilan

Recent Posts