Connect with us
pradeep

Biggboss Tamil 7

இந்த 6 பொண்ணுங்கள நம்பி ஏமாந்துட்டேன்! பிரதீப் ஆண்டனி விஷயத்தில் உண்மையை உடைத்த பிரபலம்

Pradeep Antony:   நாளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபினாலே கோலாகலமாக  நடைபெற இருக்கிறது. யார் அந்த டைட்டில் வின்னரை தட்டிப் பறிக்க இருக்கிறார்கள் என்பதில் ரசிகர்கள் உட்பட பிரபலங்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த வாரம் முழுவதும் எவிக்ட் ஆகி போன போட்டியாளர்கள் எல்லாருமே கெஸ்ட்டாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.

இன்று நிக்‌ஷன், விசித்ரா உட்பட அனைவருமே வீட்டிற்குள் வர இருக்கிறார்கள். ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் வீடு இன்றும் மீண்டும் அதே மாதிரியான ஒரு சூழலுக்குத்தான் திரும்பியிருக்கிறது.

இதையும் படிங்க: 17 வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட ஷோபா… மண்ணில் புதைந்த ரகசியம் இதுதான்!..

ஆனால் பிரதீப் ஆண்டனி மட்டும் இல்லை என்பதுதான் அநேக ரசிகர்களின் மன வருத்தமாக இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே உள்ளே போன ப்ராவோ பிரதீப் ஆண்டனி குறித்து அர்ச்சனாவிடம் அவருடைய வருத்தத்தை தெரிவிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

அதாவது வெளியே போன பிறகுதான் தெரிந்தது. நான் எவ்வளவு தவறு செய்திருக்கிறேன் என்று. அந்த 6 பெண்கள் சொன்னதை கேட்டு நானும் ரெட் கார்டை தூக்கி விட்டேன். ஆனால் கொஞ்சம் விசாரித்திருக்க வேண்டும் என்றாவது நான் சொல்லியிருக்க வேண்டும்.

இதையும் படிங்க: தங்கலானா முக்கியம்!.. தங்கம் எப்படி ஏறி இறங்கி வொர்க்கவுட் பண்றாங்கன்னு பாருங்கடா!..

அது என் உள் மனதை துளைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கேமிரா முன்னாடி இந்த 6 பெண்கள் இந்த அளவு வெளிப்படையாக கூறுகிறார்கள் என்றால் அதில் உண்மை இருக்கும் என்று நினைத்து ஏமாந்து விட்டேன். ஆனால் அதில் பாதி உண்மை இருக்கிறது. பாதி பொய் இருக்கிறது. கொஞ்சம் விசாரித்திருக்கலாம் என தன் மனக்கவலையை கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top