பாலா வணங்கான் படத்தின் மூலம் நிச்சயமா ஒரு அழுத்தமான இடத்தை மறுபடியும் பிடிப்பார். இதை நான் நம்புறேன். ஏன்னா அந்தப் படத்தோட சில காட்சிகளை நான் பார்த்தேன். ரொம்ப பிரமாதமா பண்ணியிருக்காங்க என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். இன்னும் இதுகுறித்து கூடுதல் தகவல்கள் என்னென்ன தருகிறார் என்று பார்ப்போமா…
பழைய பாலாவை பார்க்குற மாதிரி இருந்துச்சு. இந்தப் படத்தை இன்னும் விளம்பரப்படுத்தும் வேலைகள்ல அந்தத் தயாரிப்பு நிறுவனம் இறங்கல. ஏன்னா அது ஆகஸ்ட் 15ம் தேதி தான் வரப்போகுது.
இதையும் படிங்க… விஜய் இடத்தை பிடிக்க சரியான ரூட்டை பிடித்த சிவகார்த்திகேயன்! 2026க்குள் இவர்தான் டாப்
இன்னும் அதிக நாள்கள் இருக்குறதால இவ்ளோ சீக்கிரமா படத்தோட புரோமோஷன் ஸ்டார்ட் பண்ண வேண்டாம். பிரம்மாண்டமா ஒரு ஆடியோ லாஞ்ச் வச்சிட்டு புரோமோஷன ஸ்டார்ட் பண்ணி ரிலீஸ் வரைக்கும் கொண்டு போவாங்க.
நிச்சயம் மீண்டும் ஒரு பாலா பற்றிய பேச்சு வரும். வணங்கான் படம் ஆரம்பிக்கும்போது சூர்யா தான் தயாரிப்பாளரா இருந்தாரு. அந்த சமயத்தில பாலாவுக்கு சில கோடிகள் கொடுத்து உதவி செய்தார். அவை எல்லாம் செலவாகி விட்டது. அந்தப் பணத்தை சூர்யா திருப்பி வாங்கல.
அதுல மனக்கசப்பு ஏதும் இருக்கா? ஆடியோ லாஞ்சுக்கு சூர்யா வருவாரான்னு அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
சூர்யாவை அழைப்பதற்கு வாய்ப்பு கிடையாது. ஏன்னா பாலா வந்து ரொம்ப பெருந்தன்மையா இந்த விஷயத்துல நடந்துக்கிறாரு. ஏன்னா வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது.
அப்போ பாலா தயாரிப்பு நிறுவனங்களிடம் இதைத் தான் கேட்டாராம். என்னன்னா சூர்யா வீடு இருக்குற பகுதிகள்ல ஒட்ட வேண்டாம் என்று. என்ன காரணம்னா அந்த போஸ்டரை அவங்க பார்க்கும்போது ஏதோ வீம்புக்காக ஒட்டுன மாதிரி ஒரு ஃபீல் வரும். இந்தப் படத்துல இருந்து நீ வெளில போயிட்ட.
ஆனா நான் வேறொரு ஹீரோவை வச்சி இந்தப் படத்தை முடிச்சிட்டேன் பாரு. அப்படிங்கற தெனாவெட்டை அவங்க உணர்ந்துர்ற கூடாது. ஆனா அது சத்தியமா கிடையாது. அதனால நீங்க அந்தப் பகுதிகள்ல ஒட்டக்கூடாதுன்னு சொன்னாரு.
அதே மாதிரி சூர்யாவும் பாலாவிடம் பெருந்தன்மையா நடந்து கொள்கிறார். வணங்கான் படத்துக்காக 7 கோடி வரை சூர்யா செலவு பண்ணிருக்காரு. இதுவரைக்கும் அவர் பாலாவிடம் திருப்பிக் கொடுங்கன்னு கேட்கவே இல்லை. இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் வருத்தமோ, ஈகோவோ எதுவுமே இல்லை.
நாளைக்கு வணங்கான் சூப்பரா இருக்குன்னா, ‘அண்ணே படம் நல்லாருக்குண்ணேன். நான் தான் மிஸ் பண்ணிட்டேன்’னு சூர்யா சர்வ சாதாரணமா சொல்லிட்டாரு. அவர்களுக்குள் ஒன்றுமே இல்ல. இணக்கமான சூழல் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாலா சூர்யாவுக்கு பிதாமகன், நந்தா என பல பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…