Connect with us

Cinema News

நள்ளிரவில் லியோ நடத்திய சாதனை!.. அடேங்கப்பா ஒரே ரத்த களறியா இருக்கே.. பாக்ஸ் ஆபிஸ் பிச்சிக்கப்போகுது!..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள நியூ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென டிக்கெட் புக்கிங் பிவிஆர் – ஐனாக்ஸ் திரையரங்குகளில் ஓபன் செய்யப்பட்ட நிலையில் அதிரடியாக மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் மற்றும் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள லியோ வரும் மக்கள் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இதையும் படிங்க: ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட விஜயகாந்தின் படம்! ஏன் மக்கள் ஏத்துக்கலனு தெரியல – வருத்தத்தில் பேசிய நடிகை

சென்னை தியேட்டர்கள் புக்கிங்கை நேற்றுவரை ஆரம்பிக்காமல் இருந்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அதிரடியாக முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், அதற்காகவே கழுகு போல காத்திருந்த விஜய் ரசிகர்கள் முதல் நாள் சோர்வுக்கான மொத்த டிக்கெட்டுகளையும் பிவிஆர் மற்றும் புக் மை ஷோ ஆப்கள் மூலமாக பதிவு செய்து மொத்தத்தையும் ரெட் கலராக மாற்றி உள்ளனர்.

உலகம் முழுவதும் லியோ டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்டு இதே நிலமை தான் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் இன்னமும் ரோகினி உள்ளிட்ட பல திரை அரங்குகளில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்படாத நிலையில், இன்று காலை வெளியாகும் தீர்ப்பைத் தொடர்ந்து காலை 7:00 மணி காட்சி ஒதுக்கப்படுமா? அல்லது முதல் காட்சி 9:00 மணிக்கு தானா என்கிற நிலை தெரிந்தவுடன் ஒட்டுமொத்த டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே ஹவுஸ்ஃபுல் ஆகும் நிலைமை ஏற்படும் என்பது தெரிகிறது.

இதையும் படிங்க: கல்யாணத்துக்கு பிறகும் இந்த காட்டு காட்டுறாரே!.. கியாரா அத்வானியின் இந்த தாராளம் போதுமா!..

google news
Continue Reading

More in Cinema News

To Top