தம்பிக்கு வாய்ப்பு கொடுத்த ஷங்கர்... ஆனா அவரது படத்தில் நடிக்க மறுத்த தேவயாணி

இந்தியன் 2 படத்தின் கதையை முதல்ல டைரக்டர் ஷங்கர் தேவயாணிக்கிட்ட தான் சொன்னாராம். அதுல பிரியா பவானி சங்கரோட அம்மா வேடமாம். அதுல நடிக்க சம்மதமான்னு கேட்டதுக்கு முடியவே முடியாதுன்னு மறுத்துவிட்டாராம் தேவயாணி.

ஆனா தேவயாணி தான் ஒரு காலகட்டத்தில் இயக்குனர் ஷங்கரை நேரில் சந்தித்து பாய்ஸ் படத்தில் தன் தம்பி நகுலுக்கு எப்படியாவது நடிக்கறதுக்கு வாய்ப்பு கொடுங்கன்னு கேட்டுள்ளார். அப்படின்னா அப்பவே ஷங்கர் மேல அவருக்கு அவ்ளோ மரியாதையும், மதிப்பும் இருந்துருக்கு. ஆனா இங்க என்ன தலைகீழா அல்லவா நடந்துருக்குன்னு கேள்வி எழும்.

300 கோடி பட்ஜெட், ஷங்கர், லைகா, கமல்னு பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருக்குற இந்தியன் 2 படம். அப்புறம் ஏன் நடிக்கல. அந்தக் கேள்வி நமக்கு மட்டுமல்ல. அவரது கணவரான ராஜகுமாரனுக்கும் எழுந்துள்ளது. அதற்கு என்னா அழகா பதில் தருகிறார் பாருங்க தேவயாணி.


இந்தக் கதையில ஒரு பெரிய தவறு இருக்கு. அப்பா, அம்மா தவறு செய்றதை பிள்ளைகள் காட்டிக் கொடுக்கிறாங்க. அப்படின்னா கதை கேட்கும்போதே தப்பா இருக்குதே. இதைத் தான் நாம பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோமா... இல்லன்னா சொல்லிக் கொடுக்கப் போறோமா...? எவ்வளவு பணம் கொடுத்தாலும் இப்படி ஒரு படத்துல நான் நடிக்க மாட்டேன். இது ஒரு தவறான கதை அப்படின்னு அம்மணி பிடிவாதமாக இருந்தாராம். என்ன ஒரு இன்டலிஜென்ட். இவங்களுக்கே தெரியும்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஏன் இந்த லாஜிக் தெரியாமப் போச்சுன்னு தான் நினைக்கத் தோணுது.

2003ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் பாய்ஸ். சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக், செந்தில், நகுல், மணிகண்டன் என பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே அப்ளாஸை அள்ளும் ரகங்கள். படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, சுஜாதா எழுதிய கதையை ஷங்கர் இயக்கி இருந்தார்.

2024ல் லைகா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கிய படம் இந்தியன் 2. இந்தப் படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகியோருடன் இணைந்து ஷங்கர் கதை எழுதி இயக்கினார். அனிருத் இசை அமைத்தார். கமல், சித்தார்த், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், உள்பட பலர் நடித்துள்ளனர்.

படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல் போனது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கொஞ்ச சீனுக்குத் தான் வர்றாரு. அடுத்த பாகத்தில் தான் முழுவதும் வருவாராம். அதனால் அடுத்த பாகமாக வெளிவர உள்ள இந்தியன் 3 தான் பிரமாதமாக இருக்கும் என்கிறார்கள்.

Related Articles
Next Story
Share it