Categories: latest news

படம்தான் கை கொடுக்கல.. இதையாவது கொண்டாடுவோம்! சூர்யா நடத்தும் பிரம்மாண்ட விழா

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சூர்யா இருந்தாலும் அவருடைய சமீப கால படங்கள் பெரும் தோல்வியை தழுவி வருகின்றன. அவர் ஒரு பெரிய ஹிட் கொடுத்தே கிட்டதட்ட பல வருடங்கள் ஆகிவிட்டன. சிங்கம் படத்திற்கு பிறகு அவருக்கு என ஒரு பெரிய வெற்றி என எந்த படமும் கொடுக்கவில்லை. சமீபத்தில் வெளியான கங்குவா மற்றும் ரெட்ரோ போன்ற திரைப்படங்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அந்தப் படமும் காலை வாரிவிட்டது .

இதனால் ரசிகர்கள் அனைவரும் சூர்யா மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். கதையை தேர்ந்தெடுப்பதில் சூர்யா கவனம் செலுத்தவில்லையோ ஏன் இந்த மாதிரி எல்லாம் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என பல பேர் அவருக்கு அடுத்தடுத்து பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே வந்தனர். தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அவருடைய அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளான வாடி வாசல், ரோலக்ஸ் போன்ற திரைப்படங்கள்தான் ரசிகர்களின் பெரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் அந்தப் படம் நடக்குமா நடக்காதா என்ற ஒரு சந்தேகத்தின் பேரிலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் சூர்யா சம்பந்தப்பட்ட ஒரு தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை சார்பாக ஒரு பெரிய விழாவை கொண்டாட இருக்கிறாராம். அதாவது அகரம் அறக்கட்டளையை நிறுவி கிட்டத்தட்ட 15 வருடங்கள் முடிவடைந்து விட்டதாம். அந்த 15 வருட விழாவை சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறாராம் சூர்யா. அதில் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை படிக்கும் படித்த மாணவ மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பிக்க உள்ளார்களாம்.

அது மட்டுமல்ல சிறப்பு விருந்தினராக கமல் மற்றும் அமீர்கான் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அகரம் அறக்கட்டளை சார்பாக பல்வேறு குழந்தைகளுக்கு கல்வியை வழங்கி வரும் சூர்யாவின் இந்த செயல் பலபேருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அதை சூர்யாவும் எந்த விதத்திலும் விளம்பரப்படுத்தியதே கிடையாது. இந்த விழா மூலம் இப்போது அது அனைவருக்கும் தெரியவரும். அதன் மூலமாவது சூர்யாவை இனி யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago