கடைசி வரை சூர்யாவுக்கு கஞ்சி கிடைக்காது போல!.. மீண்டும் வாயை விட்ட ஜோதிகா.. புண்ணாகிடுச்சே!

by ராம் சுதன் |
கடைசி வரை சூர்யாவுக்கு கஞ்சி கிடைக்காது போல!.. மீண்டும் வாயை விட்ட ஜோதிகா.. புண்ணாகிடுச்சே!
X

Jyothika: ஜோதிகா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பாலிவுட் பக்கம் வாய்ப்புக்காக பல்டி அடிக்க வேண்டி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஜோதிகா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். தன்னுடைய நடித்த சக நடிகரான சூர்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

அதை தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து 36 வயதினிலே படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே தனி நாயகி கதையாகவே இருக்கிறது.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வந்தார். திடீரென தன்னுடைய கணவர் மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் செட்டில் ஆகினார். அதற்கு சூர்யா மற்றும் ஜோதிகா என இருவரும் வெவ்வேறு காரணம் சொல்லி சிக்கினர்.

சூர்யாவுக்கு பாலிவுட் ஆசை காட்டினாலும் அவருக்கு ஒற்றை வாய்ப்பு கூட கிடைக்காமல் பல்ப் வாங்கி மீண்டும் கோலிவுட் பக்கம் வந்துவிட்டார். இதில் சூர்யா நடித்த கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் குவிந்தது.

அதற்கு முதல் ஆளாக ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டா மூலம் மற்ற நடிகர்களை கணவருக்காக தாக்கி தேவையில்லாமல் பேசி ரசிகர்களிடம் வசை வாங்கினார். இது ஒரு புறம் இருக்க அம்மணி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அஜய் தேவ்கானுடன் சைத்தான் திரைப்படம், டப்பா கார்டல் வெப் சீரிஸ் என தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தற்போது பாலிவுட் பக்கம் ஐஸ் வைக்க தமிழ் திரையுலகத்தை சாடி பேசி மீண்டும் மாட்டி இருக்கிறார்.

தமிழ் திரையுலகத்தில் ஹீரோயின்கள் எல்லாரும் ஹீரோவை டான்ஸ் ஆடி வாழ்த்ததான் வேண்டும். பாலிவுட்டில் இது மாறிவிட்டது. ஆனால் தமிழில் இது இன்னமும் தொடர்ந்து நடந்து வருகிறது.

நான் என்னுடைய சினிமா வாழ்க்கையின் 10 வருடம் முடிந்த பின்னர், எல்லா ஹீரோக்களுடன் நடித்து இருந்தேன். அதன்பின் ஸ்கிரிப்ட்டை தேர்வு செய்யும் போது ஹீரோவை மட்டுமே மையமாக கதையாக தான் தேர்வு செய்வேன் எனவும் பேசி இருக்கிறார்.

அம்மணி உங்க கணவர் நடித்த கதையெல்லாம் எங்களுக்கு தெரியும். அவரையும் கொஞ்சம் கேளுங்க என தற்போது ஜோதிகாவை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர். அப்ப அப்ப வாயு சும்மா இல்லாம இப்படி பேசி சிக்கிடுறீங்களே தாயி!.

Next Story