மணிரத்னம், கமல், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் காம்போவில் தக் லைஃப் படம் நாளை உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி இன்று நடந்த பிரஸ்மீட்டில் கமல் பேசியவற்றில் இருந்து சில கருத்துகளைப் பார்ப்போம்.
தக் லைஃப் படத்துக்கு வந்தவங்க எல்லாருமே கத்துக்கிட்டு வந்தவங்கதான். டெக்னீஷியன்களாக இருக்கட்டும். நடிகர்களாக இருக்கட்டும். அவங்க கூட ஒர்க் பண்ணும்போது அவங்க முகத்துல இருக்குற சந்தோஷம் யூனிட்டுக்கே தொற்றியது. அதை உங்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை.
இந்தப் படத்தில் சின்னப் பையனை நடிக்கும்போது அதை எடுப்பதற்கும் 50 பேர் வேலை செஞ்சாங்க. இந்தப் படத்துல காரைப் புரட்டிப் போட்டு, தமிழ்சினிமாவையும் புரட்டி போடணும்கறதுதான் எங்களின் ரொம்ப நாள் ஆசை. அதை செய்ய முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கோம். எல்லா நேரமும் அதைச் செய்ய முடியாது.
புரட்டிப் போடுறதுங்கறது பெரிய விஷயம். கொஞ்சமாவது நகர்த்தலாம். நாங்க விரும்பும் திசை நோக்கி. எங்களுக்குக் கிடைச்ச படை வீரர்கள் நிறைந்த படை. இன்டர்நேஷனல் லெவலில் டெக்னீஷியன்களின் வேலை இருக்கும். இங்குள்ள டெக்னீஷியன்களின் வேலையைப் பார்த்து வெளிநாட்டவரே வியக்கிறார்கள்.
மணிரத்னம் பிலிம் என்பது 40 வருஷத்துக்கு முன்பே அவர் நிரூபித்து விட்டார். நாசருக்கு நாயகன் படத்தில் நடிக்கும்போது எப்படி இருந்ததோ அதே போலவே எனக்கும் இப்போது மணிசார் படத்தில் நடிக்கும்போது இருந்தது. நான் பார்த்த அந்த இளைஞர் மணி சினிமாவின் ஞானியாகவே மாறி இருக்கிறார்.
அவர்கூட வேலை செய்வது எனக்கு குதூகலமாகவே இருக்கிறது. அது எல்லாருக்கும் தெரியும். படம் பார்க்கும்போது தெரியும். வையாபுரியை ஜூனியர் ஆர்டிஸ்டா இருக்கும்போதே நாங்கள் கண்டெடுத்தோம். மருதநாயகம் படத்தில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் எங்களுடன் இணைந்தார். அதைப் பாதியிலேயே விட்டுட்டோம் என்கிற வருத்தம் உண்டு. ஆனால் அதில் இருந்ததை விட இன்னும் சிறந்த அனுபவத்துடன் இதில் பணியாற்றியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…