அவன் மேல பொறாமையா இருக்கு!.. லோகேஷ் சொல்லும் இயக்குனர் இவர்தான்..

Published on: August 8, 2025
---Advertisement---

மாநகரம் படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன்பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறினார். விஜயை வைத்து இரண்டு படங்களை இயக்கியதால் இவரின் சம்பளம் 50 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஒரு பேன் இந்தியா படமாக வெளியாகயுள்ளது. இப்படம் 1200 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வியாபாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் ஏற்கனவே இப்படம் 600 கோடி வியாபாரத்தை தாண்டியுள்ளது.

கூலி படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதியும், படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 2ம் தேதியும் வெளியாகவுள்ளதால் லோகேஷ் பல ஊடகங்களிடமும் படத்தை பற்றி பேசி புரமோஷன் செய்து வருகிறார். இந்த பேட்டிகளில் அவர் பல விஷயங்களை பற்றி பேசி வருகிறார்.

இந்நிலையில் மண்டேலா பட இயக்குனர் மடோனே அஸ்வின் பற்றி பேசிய லோகேஷ் ‘அவன் முதல் குறும்படத்திற்கு தேசிய விருது வாங்கினான். எனக்கு குறும்படமும் தெரியாது. தேசிய விருதும் தெரியாது. குறும்படங்களை இயக்கிவிட்டு 10 வருடங்கள் கழித்துதான் மண்டேலா படத்தை இயக்கினான். அதுவரை அவன் பொறுமையாக காத்திருந்தான். எனக்கு அந்த பொறுமையே இல்லை. அவன் முதல் பென்ச் மாணவன். நான் கடைசி பென்ச் மாணவன். எதையும் சரியாக செய்ய வேண்டும் என அவன் நினைப்பான். நானோ எதையாவது செய்து எஸ்கேப் ஆவேன். அவன் மீது எனக்கு பொறாமை உண்டு’ என சொல்லியிருக்கிறார்.

மடோனே அஸ்வின் யோகிபாபுவை வைத்து இயக்கிய மண்டேலா திரைப்படம் ஒரு சிறந்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் படத்தை இயக்கினர். இப்போது சியான் விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment