மாஸ் ஹிட் படத்தின் டைட்டிலை சுட்ட எஸ்கே.. அதுக்குன்னு 75 வருஷத்துக்கு பின்னாடி போயிட்டீங்களே..

by ramya suresh |
மாஸ் ஹிட் படத்தின் டைட்டிலை சுட்ட எஸ்கே.. அதுக்குன்னு 75 வருஷத்துக்கு பின்னாடி போயிட்டீங்களே..
X

Actor Sivakarthikeyan: அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்திருக்கின்றது. டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி இந்த இடத்திற்கு வந்திருக்கின்றார். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரெமோ போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அமரன் திரைப்படம்: இப்படி வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் என்கின்ற இடத்தை பிடித்திருக்கின்றார். அதற்கு காரணம் அமரன் திரைப்படம் தான். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார்கள். படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த ஒரு திரைப்படம் சிவகார்த்திகேயனை டாப் நடிகர்களில் ஒருவராக மாற்றி இருக்கின்றது.

சிவகார்த்திகேயன் லைன் அப் : அமரன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது.

இதனை தொடர்ந்து டான் திரைப்பட சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தின் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார்.

எஸ்கே 25: ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் 1965 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நிச்சயம் இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் கெரியரில் அமரன் திரைப்படத்தை தொடர்ந்து ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று தமிழ் சினிமா வட்டாரங்களில் கூறிவருகிறார்கள்.

பராசக்தி: இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு முதலில் புறநானூறு என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது இப்படத்தில் சூர்யா நடிப்பதற்கு கமிட்டாக்கி இருந்த நிலையில் அதன் பிறகு சூர்யா விலகியதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிப்பதற்கு கம்மிட் ஆனார். இதனால் படத்திற்கு 1965 என்கின்ற ஆண்டை டைட்டிலாக வைத்து இருப்பதாக கூறி வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு பராசக்தி என்கின்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கின்றது. படத்தின் டைட்டில் தொடர்பான சென்சார் முடிவடைந்து ரிப்போர்ட் வெளியாகியுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பராசக்தி என்கின்ற டைட்டில் 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பண்டரிபாய் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தின் டைட்டில் ஆகும். இந்த திரைப்படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயன் படத்திற்கு வைத்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Next Story