Categories: latest news

மைக்மோகனுக்கும் எஸ்என்.சுரேந்தருக்கும் என்னதான் பிரச்சனை? இதுல விஜய்க்கு என்ன சம்பந்தம்?

எஸ்என்.சுரேந்தர் மோகனுக்குக் குரல் கொடுத்தவர். அவரது எல்லா படங்களிலும் எஸ்.என்.சுரேந்தர் தான் அவருக்குப் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவர்களுக்குள் பிரிவு வரக் காரணம் என்னன்னா என்னோட குரலால தான் மோகன் படங்கள் ஓடுதுன்னு அவரும், என்னோட நடிப்பால தான் எஸ்என்.சுரேந்தரோட குரல் மின்னுதுன்னு மோகனும் சொல்லிட்டாங்க.

இதுல கருத்து வேறுபாடு வந்து இருவரும் பிரிஞ்சிடறாங்க. அந்த நேரத்துல உருவம்னு மோகனின் படம் வருது. அதுல அவரோட சொந்தக்குரல் எடுபடல. விஷ்ணு படத்துல எஸ்என்.சுரேந்தர் அம்மா அம்மா இது சின்ன பொண்ணுங்கற பாட்டை அவருதான் பாடுனாரு. தன் மருமகன் விஜய் எப்படி நடிக்கிறாருன்னு பார்க்கறதுக்காக அந்தப் படத்தோட சூட்டிங்கிற்கும் வந்தாரு என்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் மூவீஸ் பாலாஜி பிரபு. இவர் இன்னும் என்னவெல்லாம் சொல்கிறாருன்னு பார்க்கலாமா…

மோகனுக்கு தமிழே பேச வராது. அவருக்கு மோகமான குரலை பின்னணியாகக் கொடுத்தவர் எஸ்.என்.சுரேந்தர். மோகனின் குரல் எஸ்என்.சுரேந்தரின் குரல். அப்படித்தான் அடையாளப் படுத்தப்பட்டார். அவரை மைக்ல பேச வச்சா ரொம்ப ரொம்ப சுமாரா இருக்கும். இளையராஜா போட்ட பாடல்களில் எல்லாம் மைக் பிடிச்சி பாட ஆரம்பிச்சாரு. அதனால தான் மைக் மோகன் ஆனாரு.

ilaiyaraja, vairamuthu

குரல் கேட்டால் அவரது உருவம் நினைவு வருதுன்னு சொல்றீங்க. ரஜினிக்கு நிறைய பாடல் எஸ்பிபி பாடியிருக்காரு. ஆனா அந்தப் பாட்டைக் கேட்டா எஸ்பிபி உருவமா ஞாபகம் வருது? ரஜினி உருவம்தான ஞாபகம் வருது. அப்போ யாரு மாஸ்? ரஜினி தான் மாஸ்.

குரல் இல்லன்னு சொல்லல. ஆனா மைக் மோகனுக்கு அவரு குரல் மைனஸ். ரஜினி, கமல் எல்லாரும் அவங்களே டப்பிங் பேசுறாங்க. மோகனுக்கு டப்பிங் பேச வராது. இருவருக்கும் கருத்து வேறுபாடு யார் பெரியவர் என்பதில் வருகிறது. அதனால் தான் பிரிஞ்சாங்க.

இதே மாதிரி இளையராஜா, வைரமுத்துவுக்கு இடையே பிரச்சனை வருது. என் மெட்டுக்குத் தான் பாட்டுன்னாரு. என் பாடல் வரியால தான் இளையராஜான்னாரு வைரமுத்து. அப்போ இவர் பாடல் வரிகள் இல்லாம இளையராஜாவோட பாட்டு எல்லாம் ஹிட் ஆகலையா.

அப்படின்னா வைரமுத்து வேற மெட்டுக்குப் பாட்டு எழுதலையா? ஏ.ஆர்.ரகுமான் இசையில. அது ஹிட் ஆகலையா? இப்ப எல்லாரும் தள்ளி வச்சிட்டாங்க. அது வேற விஷயம். இளையராஜாவும், வைரமுத்துவும் 6 வருஷம்தான் இணைஞ்சு செயல்பட்டுருக்காங்க. அந்த வகையில் அற்புதமான பாடல்களை எல்லாம் கொடுத்துருக்காங்க.

வரிகளும், மெட்டுமே ஒரு பாடலுக்கு அவசியம்தான். ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. மைக் மோகன், எஸ்.என்.சுரேந்தர் இருவருக்கும் மோதல் வரும்போது இருவருக்குமே மார்க்கெட் அவுட் ஆனது. விஜய்க்கு ஆரம்பகாலத்துல எஸ்என்.சுரேந்தர் ஏணின்னு சொன்னீங்க. ஆனா இவரு அவருக்கும் உதவல. அவரு இவருக்கும் உதவல. என்னன்னா பாட்டுகள் வாங்கிக் கொடுத்தாரு. ஒரு பாட்டுக்கு நாலாயிரம், ஐயாயிரம் சம்பளம் வாங்கிக் கொடுத்தாரு அவ்ளோதான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

4 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

5 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

6 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

19 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

19 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago