எனக்கு ஜெயம்ரவியின் மீது காதல்தான்… ஆனா… பாடகி போட்ட வைரல் பதிவு!

JayamRavi: நடிகர் ஜெயம் ரவி மற்றும் பாடகி கெனிஷா மீது இருக்கும் சர்ச்சைக்கு பின்னர் முதல் முறையாக இருவரும் இது குறித்து வாய் திறந்து இருப்பது வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் அதைத் தொடர்ந்து ஆர்த்தி எனக்கும் இந்த விவாகரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடம் இது குறித்து அவர் எதுவுமே பேசவில்லை. அவருடைய சுய லாபத்திற்கு மட்டுமே இதை அறிவித்திருப்பதாக அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார்.

அதைதொடர்ந்து பிரச்சினை ஜெயம் ரவி பக்கம் திரும்பியது. கோவாவில் பாடகி கெனிஷாவுடன் ரவி ஊர் சுற்றி வருவதாகவும், மனைவி மற்றும் மகன்களை மறந்து விட்டதாகவும் பிரச்சனை வெடித்தது. ஜெயம் ரவியின் காரில் இருவரும் போக்குவரத்து மீறியதால் வழங்கப்பட்ட ரசீதுகளும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

ஆனால் இது குறித்து எந்த ஒரு மறுப்பு இரு தரப்பிலிருந்தும் வெளியாகாமலே இருந்தது. இந்நிலையில் நேற்று பிரதர் ஆடியோவில் விட்டு விழாவில், நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்து முடிவு குறித்தும் மனைவி ஆர்த்தி அறிக்கை குறித்தும் பேசியிருந்தார்.



அது மட்டுமல்லாமல் பாடகி கெனிஷாவை தனுடன் இணைத்து பேசுவது அசிங்கமான ஒரு விஷயம். அந்த பெண் ஒரு மனோ தத்துவ நிபுணர். அவருடன் சேர்ந்து நான் ஒரு மையத்தை அமைக்க இருக்கிறேன் என தெரிவித்திருப்பார். இது வைரலாகியது. இது குறித்த பதிவுகளை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தின் மூலம் கெனிஷா வெளியிட்டு இருக்கிறார்.




அழகான மக்களே என்னிடம் எவ்வளவு கேவலமான கேள்விகளை கொஞ்சமும் யோசிக்காமல் கேட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இது பதிலாக அமையும் என நம்புவதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில் நட்பிலும் ஒரு காதல் இருப்பதை பலர் மறந்துவிடுவதாக தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.

Related Articles
Next Story
Share it