இந்த லிஸ்ட்டெல்லாம் உங்களுக்கு தேவையா? அதை மட்டும் செய்யுங்க… தடாலடியாக பேசிய சூர்யா

Surya: தமிழ் சினிமாவில் சம்பாதிப்பது மட்டும்தான் தன்னுடைய கடமை என நினைக்காமல் உதவிக்கரம் நீட்டுவதில் முதல் நடிகர் யார் என கேள்வி எழுந்தால் பலரின் பதிலாக சூர்யா தான் இருப்பார். அவர் தற்போது கூறி இருக்கும் முக்கிய விஷயம் ஒன்று வைரலாகி வருகிறது.

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கோலிவுட்டில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் மட்டுமே ரிலீஸ் ஆனது. அதுபோல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தா ர்.

இதைத்தொடர்ந்து மும்பை யில் செட்டிலான சூர்யா இதுவரை எந்த ஒரு தமிழ் படத்தையும் ரிலீஸ் செய்யவில்லை. தற்போது அவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் ரிலீஸ் இருக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து சூர்யா 44 திரைப்படம் வரும் அக்டோபர் மாதத்துடன் ஷூட்டிங் நிறைவு செய்யப்பட இருக்கிறது.

விரைவில் அடுத்தடுத்து சூர்யாவின் படங்கள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் சூர்யா வித்தியாச படங்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறார். அந்தவகையில் தன்னுடைய தம்பி கார்த்தி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் மெய்யழகன்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, தற்போது படத்தின் வணிக கணக்கில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதை பற்றி நீங்க கவலைப்படாதீங்க. படத்தை மட்டும் பாருங்க. வியூ பண்ணுங்க. ரிவியூ பண்ணுவதில் ஆர்வம் காட்டாதீங்க. அதுபோல இந்த படத்தை கொண்டாடுவதற்கு தயாராகுங்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கின்றார்.

மெய்யழகன் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. படம் செப்டம்பர் 27ந் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it