வாங்குன ஜாமீன் வீணாப்போச்சே!.. ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது கிடைக்குமா?!....

Johny master: சினிமாத்துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் என்பது பல வருடங்களாக இருக்கிறது. சினிமா வாய்ப்புக்காக வரும் பெண்களிடம் சிலர் மோசமாக நடந்து கொள்கின்றனர். அவர்களிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என் கேட்டு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்.

சிலர் அதை ஏற்றுக்கொண்டு சினிமாவில் நடிக்க துவங்கிவிடுவார்கள். பலரும் சினிமாவே வேண்டாம் என சென்று விடுகிறார்கள். திரைத்துறையில் சந்திக்கும் பாலியல் தொல்லை தொடர்பாக பெண்கள் அதிகம் பேசுவதில்லை. அதற்கு காரணம் வெளியே சொல்லி சர்ச்சையானால் சினிமாவில் யாரும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்கிற பயம்தான்.

பாடகி சின்மயி கூட சில வருடங்களுக்கு முன்பு சினிமா துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி பேசினார். அவரைத் தொடர்ந்து பல பெண்களும் சமூகவலைத்தளங்களில் பேசினார்கள். அதன்பின் சின்மயிக்கு பாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. டப்பிங் பணியும் அவருக்கு யாரும் கொடுப்பதில்லை.

இப்படி நிறைய உதாரணங்கள் இருக்கிற்து. இந்நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்து குறுகிய காலத்தில் பிரபலமான ஜானி மாஸ்டரும் பாலியல் புகாரில் சிக்கினார். சில நாட்களுக்கு முன்பு நடன கலைஞரான ஒரு பெண் ஹைதராபாத் காவல் நிலையத்தில் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒருபக்கம், தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருது விழா வருகிற 8ம் தேதி நடைபெறவிருக்கிறது. எனவே, அதில் கலந்து கொள்வதாக சொல்லி ஜாமின் வாங்கினார் ஜானி.

ஆனால், ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது இப்போது ரத்து செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாலியல் புகாரில் சிக்கியதால் அவருக்கு விருது வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விரைவில் ஜானி மாஸ்ட்ர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles
Next Story
Share it